நானில்லாமலென்ன‌?

Saturday, June 19, 2010
அள்ளி அள்ளிச் சாப்பிட்ட
ஆசை காலியான‌து
பில்லைக் க‌ண்ட‌தும்



தேர்வுத் தாள்களில்
வரைந்து வைக்கிறது
கால இறகு முட்டை மதிப்பெண்களையே


எந்த ருசியும் பிடிப்பதில்லை
ஊட்டி ரோட்டில் குழந்தையின்
ஐஸைப் பிடுங்கிச் சுவைத்தபின்


தலையில் மோதிப்
பிரியும் காற்று
எடுத்துச் செல்கிறது ஒட்டு முடியை

வேறென்னன்னு கேட்டார் இல்ல இவரு.. இங்கன வந்து பார்த்துக்கச் சொல்லுங்க‌

பிளாக்கும் பின்னூட்டமும் பின்னே ஆறு டவுட்டும்

Wednesday, June 2, 2010
1.ரொம்ப யோசிச்சு சீரியசா ஒரு போஸ்ட் போடறோம்ம்னு நெனச்சு போஸ்ட்ப் போட்டுட்டு ரிப்ரெஷ் பண்ணி போஸ்ட்ப் பாக்கறதுக்குள்ள வந்து கும்மிப் பின்னூட்டங்களாப் போட்டு கும்மறாங்களே.. அந்த நேரத்தில் அவங்க ஆபீஸ் மேனேஜரோ,வீட்டுத தங்கமணியோ அவங்கள எந்த வேலைக்கும் கூப்ட மாட்டாங்களா??!!!


2. நாம உண்மையிலெயே நல்லா எழுதுன போஸ்ட் நல்லாருக்கான்னு அடுத்தவங்ககிட்ட கேக்காம இருந்துட்டு செம்ம மொக்கை போஸ்ட்க்கு மட்டும் கருத்து கேட்டு அதுவும் நல்லா இருக்குன்னு பதில் வரணும்ன்னு எதிர் பார்ர்க்கறோமே.. லாஜிக்படி இது சரியா?

3.நாம‌ போஸ்ட் போட்டுட்டு சாட்,ஜிமெயில்,எஸ்.எம்.எஸ்ன்னு எப்பிடிக் கூப்ப்டாலும் ந‌ம்ம‌ பிளாக் ப‌க்க‌ம் வ‌ராத‌வ‌ங்க‌,போஸ்ட் போடாம‌ பிரேக் விட்டா ம‌ட்டும் க‌ரெக்ட்டா வ‌ந்து எழுத‌ற‌தே மொக்கை அதையும் தொட‌ர்ச்சியா எழுத‌ மாட்டியான்னு கேக்க‌றாங்க‌ளே அது எப்பிடி??

4.போஸ்ட் போட உக்காந்தா அடம்புடிக்கற சிந்தனையும் சொற்களும், யாராவது ஒரு கைப்புள்ள பிளாக்ல கும்மும்போது ம‌ட்டும் ச‌ராமாரியா வ‌ருதே..அதுவ‌ரைக்கும் இந்த‌த் திற‌மையெல்லாம் எங்க‌ ஒளிஞ்சிருக்கும்?

5.பிளாக் அல்லாத உலகத்துல் வெளில‌ வ‌ராத‌ ந‌ம்ம‌ இலக்கிய‌தாக‌மும்,உல‌க‌ அறிவும்,த‌மிழ் ப‌ற்றும் பிளாக்குல‌ ப‌ற்றும் தாராள‌மா பொங்குவ‌து ஏன்?

6.பிளாக்குல‌ காலேஜ‌ப் ப‌த்தியும் கிளாஸ‌ப் ப‌த்தியும் பேசினா திட்டாத‌வ‌ங்க‌, கிளாஸ்ல‌ பிளாக்க‌ப் ப‌த்தி பேசினா டென்ச‌ன் ஆக‌றாங்க‌ளே.ச‌ட்ட‌ங்க‌ள் இட‌த்துக்கு இட‌ம் மாறுப‌டுமா?



மக்களே இது சும்மா.ஜுஜுபி.. நான் வெறும் அம்புதான்.. எய்யப்பட்டது இங்க இருந்துதான்...


.

கடவுளும் நானும்..தொடர் பதிவு

Tuesday, June 1, 2010
கடவுள் என்பவர் எனக்கு ஒரு சுவாரஸ்யமான தோழமையாகவே இன்றுவரை இருக்கிறார்.அதில் கெஞ்சல்,சமாதானம்,அன்பு,பாசம்,கோபம்,விளையாட்டு,சண்டை எல்லாமே உண்டு.

ரொம்ப சின்ன வயசுல அண்ணா கூட கோயிலுக்குப் போனப்போ, தீபத்தை தொட்டுக் கும்பிட்டுக்கோ என அண்ணன் சொல்லப் போக, தமையன் பேச்சைத் தட்டாத தங்கையாக தீபத்தின் மேலேயே கை வைத்துத் தொட்டுக் கும்பிட, அப்புறம் என்ன ஒரே கத்தல்தான், அழுகைதான்.இப்பிடியாக சாமிக்கும் எனக்குமான ரிலேஷன் கொலைவெறிலதான் ஆரம்பிச்சிது

அதுக்கு அப்புறம் சுவாரஸ்யமான காலம் ஆரம்பிச்சது ஒரு மார்கழி மாதத்தில்..
வீட்டுக்கு விருந்தாளியா வந்த ஏதோ ஒரு அத்தை, மார்கழி மாசம் அதிகாலை கோயிலுக்குப் போனா ரொம்ப நல்லது என கொழுத்திவிட்டுப் போக,அதைக் கேட்ட நானும் என் பிரண்டும் நாம் ரெண்டு பேரும் போகலாம்ன்னு முடிவு பண்ணி பிளான் எல்லாம் போட்டோம்.என்ன பிளான் தெரியுங்களா..ரெண்டு பேர்ல யார் அதிகமா போறாங்களோ அவங்களுக்கு அதிக நல்லது நட‌க்கும்.. அதனால கோயில்லுக்கு போகும்போது எல்லாம் சாமிக்கு முன்னாடி ஒரு பூவை வச்சிட்ட்டு வரணும்ன்னு பிளான். யார் முன்ன போரதுன்னு போட்டில நைட் 2 மணி 3 மனிக்கு எல்லாம் கோயில்ல போய் பூட்டி இருக்க கிரில் கேட்க்குல்ல பூவை வச்சிட்டு வருவோம்


இது வீட்ல யாருக்கும் தெரியாது.இப்பிடியே சில வருஷங்கள் மார்கழி மாசம் தொடர்ந்தது.ஒரு நாள் எங்கள் எதிர் வீட்டுப் பெரியம்மா எங்கியோ வெளியூர் போயிட்டு ஒரு மணிக்கோ 2 மணிக்கு நைட் ரிடர்ன் ஆக, அந்த நேரம் பார்த்து நான் கோயிலுக்குப் போக... அவ்ளோதான் அந்த சகாப்தம் அன்றோடு முடிந்த்து

கடவுள் என்பவர் தெருக்கோடி கடைக்காரர் போல நம் ஆசைகள் எல்லாத்தையும் பையில் போட்டு வைத்திருப்ப்பார் .. நம் செய்கைகள் பிடித்தால் அந்தப் பைகளை நமக்கு குடுப்பார்ன்னு நென‌ச்சிட்டு இருந்த காலம் அது.பின் +2 வரை கடவுள் என்னுடன் குறிப்பிடத்தகுந்த பிரச்சினை எதையும் செய்து கொள்ளவில்லை.அதனால் இன்ட்ரஸ்டிங்கா ஏதும் இல்ல‌

+2 வில் ஆசைப்பட்ட படிப்பு சேர மார்க் இருந்தும் குடும்ப சூழ்னிலையால் சேர முடியாமல் போன போது ஆரம்பிச்சது கடவுள் கூட சண்டை..உனக்கு எனக்கும் சரிவராது.. நீ எனக்கு ஏதும் செய்ய மாட்டே.. நீ உன் வழியில் போ.. நான் என் வழியில் போறேன். என சாமி கூட டூ விட்டு இருந்த காலம் கல்லூரிக் காலம்.கடவுள் கூட மனதளவில் டூ விட்டு இருந்தாலும்,கோயிலுக்கு யார் கூப்டாலும் போயிடுவேன்.கோயில போய் சாமி முன்னாடி நின்னுகிட்டு "ம்ம்.. நல்லாருக்கியா.. நான் உன்னைக் கும்பிட வரல.உன்னோட பக்தைக்கு கம்பெனிகுடுக்க வந்தேன். அப்படின்னு மனசுக்குள்ள சொல்லிட்டு நின்னுட்டு இருப்பேன்

பின்னர் முதுகலையில் பக்திமயமான தோழிக்கு கம்பெனி குடுக்க அடிக்கடி ஒரு புது கோயிலுக்குப் போக ஆரம்பித்து அக்கோயிலின் அமைதியான அழகான சூழ்நிலையால் கவரப் பட்டு சாமிகூட பழம் விட்டு உறவு புதுப்பிக்கப்பட்டது.புதுப்பிக்கப்பட்ட தோழமையாகவே ஓடிக் கொண்டிருக்கிறது.

எங்களுக்குள் கொடுக்கல் வாங்கல்கள் ஆரம்பித்திருக்கின்றன..பள்ளி நாட்களைப் போல ப்ளீஸ் எனக்கு இது மட்டும் செய்யேன். நான் உனக்கு பூஜையெல்லாம் பண்றேன் என வேண்டுதல்களை முன் வைக்க ஆரம்பித்திருக்கிறேன்.

ம்ம்..இதோ வானிலை தொடருமா மீண்டும் இடி,மழை,தென்றல் எல்லாம் வீசுமா எனப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

என் வீட்டில் அம்மா பக்திப் பழமாக இருந்தாலும், நான் சொல்றத சொல்லிட்டேன்.அதுக்கப்புறம் உனக்கு சாமி விஷயத்துல எப்படி தோணுதோ அப்படி இரு என சுதந்திரம் கொடுப்பதுதான் கடவுள் என் தோழனாகவே நிலைக்க காரணம்.இல்லன்னா. அவர் கடவுளாகவே இருந்திருப்பார் நான் அவரது பக்தையாகவோ பக்தியை மறுப்பவளாகவோ இருந்திருப்பேன்.

இந்தத் தொடர்பதிவுக்கு அழைத்த சுசி அவர்களுக்கு நன்றி.

நான் வேண்டி விரும்பி அழைப்பவர்கள்

மகா
ராஜலஷ்மி
சுபிவண்யா.


.