நன்றி மக்களே

Sunday, July 11, 2010
மக்களே.. இன்றுவரை என் வலைப்பூவுக்கு ஆதரவு அளித்தமைக்கு நன்றி.இனிமேல் இந்த வலைப் பூவில் எந்த புதிய பதிவும் வராது..

அனைவருக்கும் நன்றி

நானில்லாமலென்ன‌?

Saturday, June 19, 2010
அள்ளி அள்ளிச் சாப்பிட்ட
ஆசை காலியான‌து
பில்லைக் க‌ண்ட‌தும்



தேர்வுத் தாள்களில்
வரைந்து வைக்கிறது
கால இறகு முட்டை மதிப்பெண்களையே


எந்த ருசியும் பிடிப்பதில்லை
ஊட்டி ரோட்டில் குழந்தையின்
ஐஸைப் பிடுங்கிச் சுவைத்தபின்


தலையில் மோதிப்
பிரியும் காற்று
எடுத்துச் செல்கிறது ஒட்டு முடியை

வேறென்னன்னு கேட்டார் இல்ல இவரு.. இங்கன வந்து பார்த்துக்கச் சொல்லுங்க‌

பிளாக்கும் பின்னூட்டமும் பின்னே ஆறு டவுட்டும்

Wednesday, June 2, 2010
1.ரொம்ப யோசிச்சு சீரியசா ஒரு போஸ்ட் போடறோம்ம்னு நெனச்சு போஸ்ட்ப் போட்டுட்டு ரிப்ரெஷ் பண்ணி போஸ்ட்ப் பாக்கறதுக்குள்ள வந்து கும்மிப் பின்னூட்டங்களாப் போட்டு கும்மறாங்களே.. அந்த நேரத்தில் அவங்க ஆபீஸ் மேனேஜரோ,வீட்டுத தங்கமணியோ அவங்கள எந்த வேலைக்கும் கூப்ட மாட்டாங்களா??!!!


2. நாம உண்மையிலெயே நல்லா எழுதுன போஸ்ட் நல்லாருக்கான்னு அடுத்தவங்ககிட்ட கேக்காம இருந்துட்டு செம்ம மொக்கை போஸ்ட்க்கு மட்டும் கருத்து கேட்டு அதுவும் நல்லா இருக்குன்னு பதில் வரணும்ன்னு எதிர் பார்ர்க்கறோமே.. லாஜிக்படி இது சரியா?

3.நாம‌ போஸ்ட் போட்டுட்டு சாட்,ஜிமெயில்,எஸ்.எம்.எஸ்ன்னு எப்பிடிக் கூப்ப்டாலும் ந‌ம்ம‌ பிளாக் ப‌க்க‌ம் வ‌ராத‌வ‌ங்க‌,போஸ்ட் போடாம‌ பிரேக் விட்டா ம‌ட்டும் க‌ரெக்ட்டா வ‌ந்து எழுத‌ற‌தே மொக்கை அதையும் தொட‌ர்ச்சியா எழுத‌ மாட்டியான்னு கேக்க‌றாங்க‌ளே அது எப்பிடி??

4.போஸ்ட் போட உக்காந்தா அடம்புடிக்கற சிந்தனையும் சொற்களும், யாராவது ஒரு கைப்புள்ள பிளாக்ல கும்மும்போது ம‌ட்டும் ச‌ராமாரியா வ‌ருதே..அதுவ‌ரைக்கும் இந்த‌த் திற‌மையெல்லாம் எங்க‌ ஒளிஞ்சிருக்கும்?

5.பிளாக் அல்லாத உலகத்துல் வெளில‌ வ‌ராத‌ ந‌ம்ம‌ இலக்கிய‌தாக‌மும்,உல‌க‌ அறிவும்,த‌மிழ் ப‌ற்றும் பிளாக்குல‌ ப‌ற்றும் தாராள‌மா பொங்குவ‌து ஏன்?

6.பிளாக்குல‌ காலேஜ‌ப் ப‌த்தியும் கிளாஸ‌ப் ப‌த்தியும் பேசினா திட்டாத‌வ‌ங்க‌, கிளாஸ்ல‌ பிளாக்க‌ப் ப‌த்தி பேசினா டென்ச‌ன் ஆக‌றாங்க‌ளே.ச‌ட்ட‌ங்க‌ள் இட‌த்துக்கு இட‌ம் மாறுப‌டுமா?



மக்களே இது சும்மா.ஜுஜுபி.. நான் வெறும் அம்புதான்.. எய்யப்பட்டது இங்க இருந்துதான்...


.