பள்ளிக்கால‌ நினைவுகள்-I

Saturday, October 10, 2009
சில நாட்களுக்கு முன் அபியும் நானும் திரைப்படத்தில் பிரகாஷ்ராஜ் தன் பொண்ணை பள்ளியில் சேர்க்க படும்பாடுகளை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன். அப்போ எங்க அப்பா சொன்னாங்க.. நல்லவேளை.. என் புள்ளயெல்லாம் என்னை இப்பிடி அலைய விடல. அதுக்கு அதுவே அட்மிஷன் வாங்கிச்சு அப்படின்னு.. ம்ம்..எனக்கு அதெல்லாம் கொஞ்சம் நியாபகம் இருந்தாலும்.. நல்லா தெளிவா இல்ல.. அதனால அப்பாகிட்ட டீடெயிலா கேட்டேன்..அவர் சொன்ன உடனே என் பிளாகர் புத்தி வேலை செய்ய ஆரம்பிச்சுது.. ஆமா.. நாம அட்மிஷன் வாங்கின கதைய பிளாக்ல போடலாமேன்னு.. இதோ ஆரம்பிச்சுட்டேன்..

நான் பேச ஆரம்பிச்ச காலத்திலயே என் தமிழ் இலக்கியப் பயணம் ஆரம்பமாயிடுச்சு..எங்க அம்மா வீட்டு வேலைகள்னால என்னைப் பார்த்துக்கும் வேலைய எங்க அப்பாகிட்டயும் சித்திகிட்டயும் கொடுத்திருக்காங்க..எங்க அப்பா நிறைய இலக்கியக் கூட்டங்கள்ல பேசுவார். தமிழைப் பற்றி நிறையவே படிப்பார். அந்த நேரத்தில எங்க சித்தி தமிழ் இலக்கியம் முதுகலைப் படிச்சிட்டு இருந்திருக்காங்க.. வீட்ல இலக்கிய ஆறு கரைபுரண்டு ஓடிட்டு இருந்திருக்கு..அதனால "அம்மா சொல்லு", "அப்பா சொல்லு" சொல்லிக்குடுக்க வேண்டிய வயசில எனக்கு "அகர முதல சொல்லு" ன்னு சொல்லிக்குடுக்க ஆரம்பிச்சிட்டாங்க எங்க அப்பாவும் சித்தியும் . இப்பிடியே போக மூணு வயசிலயே.. பெரும்பாலான திருக்குறள், சில சிலப்பதிகார, கம்பராமாயணச் செய்யுள்கள்,பாரதி, பாரதிதாசன் கவிதைகள்ன்னு சகலமும் சொல்ல ஆரம்பிச்சுட்டேன்..
அப்போ எங்க வீட்ல பெருசா வாசல் இருக்கும்.. நாலுபக்கமும் ரூம் இருக்கும். எங்க அண்ணாக்கு அந்த வாசல்தான் சிலேட். காலைல எழுந்து.. அ,ஆ,...A,B,C,D...1,2,3,4.. எல்லாம் எழுதி அம்மாகிட்ட காட்டிட்டு தான் ஸ்கூல் போவான். நாம தான் அண்ணாவைக் அட்டக்காப்பி அடிக்கறாவங்களாச்சே..அதனால அண்ணா ஸ்கூல் போனதும் ..அந்த எழுத்துக்கள் மேலயே நானும் எழுதிப்பழக ஆரம்பிச்சுட்டேன்..
அப்போ..அண்ணா..சித்தி எல்லாரும் ஸ்கூல் போக நானும் ஸ்கூல் போகணும்ன்னு ஆசை வந்திருக்கு.. நானும் ஸ்கூல் போறேன்னு அடம் பிடிக்க ஆரம்பிச்சாச்சி.. அப்போவெல்லாம் ஹெட்மாஸ்டர் அடிப்பார்ன்னு என்னை அடக்கிட்டாங்க.அந்த வருஷம் எதோ ஒரு உதவிக்கு எங்க ஊர் பள்ளியோடத் தலைமை ஆசிரியர் அடிக்கடி எங்க வீட்டுக்கு வந்திட்டு இருந்திருக்கார். ஒரு நாள் அவர் அப்படி வந்தப்போ அவர் கிட்ட போயி..சார்.. நான் "தேராமன்னா.". சொல்வேன்.. "பொதியமலை விட்டெழுந்து" சொல்வேன்.. "துப்பார்க்க்குத் துப்பாய" சொல்வேன்.
( இதெல்லாம் திருக்குறள்..சிலப்பதிகாரம்ன்னு கூட அந்த வயசில தெரில):‍( என்னை உங்க பள்ளிகூடத்துல அடிக்காம‌ சேர்த்திகிறீங்களா? எங்க அண்ணா கூட நானும் வரேன்னு சொல்லி இருக்கேன்..அவர் அசந்துபோயி.. எங்க அப்பாகிட்ட பாப்பாவ ஸ்கூல்க்கு அனுப்புங்கன்னு கம்பெல் பண்ணியிருக்கார்.எங்க அப்பா அடுத்த வருஷம் தான் அனுப்பனும்ன்னு சொல்ல..அதுக்கு H.M..பால்வாடிக்காவது அனுப்புங்கன்னு கூட்டிட்டு போய்டார்..என் பள்ளி செல்லும் படலம் ஆரம்பிச்சுது..

ஸ்கூல்ல போயி நான் இந்த சிலப்பதிகாரத்தையும், திருக்குறளையும் வச்சிகிட்டு போட்ட சீன்ல பால்வாடில இருக்கற ஆயம்மா எல்லாம் பயந்து போக‌ அதே வருஷம் ஒன்றாம் வகுப்புல தூக்கிப் போட்டிட்டாங்க .
அந்த கிளாஸ்ல என் கஸின் ஒரு அக்கா படிச்சாங்க.. என்னை விட 2 வருசம் பெரியவங்க..ஆனா பாவம்..என்னோட கிளாஸ்.. ஸ்கூல் முடிக்கறவரைக்கும் அந்த அக்காவும் நானும் ஒண்ணாபோனா ..இந்த விவரமெல்லாம் தெரியாத சொந்தக்காரங்க‌ "எந்த கிளாஸ் படிக்கறீங்க ரெண்டு பேரும்"ன்னு கேட்டுட்டு.. " ஏன் தமிழு? நீ பெயிலாயிட்டியா? தங்கச்சிகோட ஒரே கிளாஸ்ல படிக்கற"அப்படின்னு அந்த அக்காவக் கேப்பாங்க..அப்போ தமிழக்கா ஆகற டென்சன் இருக்கே... அப்பப்பா..அக்னி பகவேனே நேர்ல வந்து நிக்கற மாதிரி தான் இருக்கும்..:‍)

ஆனா அந்த அக்காவும் நானும் சேர்ந்துட்டு ஸ்கூல பண்ணின சேட்டைகள் ரொம்ப அதிகம்.. ஆனா எதிலயாவது மாட்டினாலும் பாவம் பெரிய புள்ளன்னு அவங்கதான் திட்டு வாங்குவாங்க..அதெல்லாம் இன்னொரு நாள் சொல்றேன் ..

இந்த நிகழ்வெல்லாம் கூட எழுதி உங்களயெல்லாம் கொடுமை பண்ணலன்னா பிளாக் வச்சிருந்து என்ன பயன்..அதான் எழுதிட்டேன்
(அப்போ இருந்த அறிவை இப்போ காக்கா தூக்கிட்டு போயிடுச்சா என்பது போன்ற கேள்விகள் தடை செய்யப்படுகின்றன‌)

.

105 comments:

ஆயில்யன் said...

//இப்பிடியே போக மூணு வயசிலயே.. பெரும்பாலான திருக்குறள், சில சிலப்பதிகார, கம்பராமாயணச் செய்யுள்கள்,பாரதி, பாரதிதாசன் கவிதைகள்ன்னு சகலமும் சொல்ல ஆரம்பிச்சுட்டேன்..///


அடேங்கப்பா!!!!

அப்புறம் யாரு கண்ட்ரோல் செஞ்சு நிப்பாட்டுனா பாஸ்...???

ஆயில்யன் said...

//அண்ணா ஸ்கூல் போனதும் ..அந்த எழுத்துக்கள் மேலயே நானும் எழுதிப்பழக ஆரம்பிச்சுட்டேன்.///

குட் பிராக்டீஸ் !!!

ஆயில்யன் said...

//அண்ணா..சித்தி எல்லாரும் ஸ்கூல் போக நானும் ஸ்கூல் போகணும்ன்னு ஆசை வந்திருக்கு//

ஹய்யோ!!!!!!

ஆயில்யன் said...

//அவர் கிட்ட போயி..சார்.. நான் "தேராமன்னா.". சொல்வேன்.. "பொதியமலை விட்டெழுந்து" சொல்வேன்.. "துப்பார்க்க்குத் துப்பாய" சொல்வேன்.///

இந்த சின்ன வயசுல எம்மாம் அறிவாளியா இருக்கீங்க நினைச்சு வியந்துபோயிருப்பாரே....!!??

ஆயில்யன் said...

//அதெல்லாம் இன்னொரு நாள் சொல்றேன் .///


அதுவும் கடந்து போகும் ! :)

butterfly Surya said...

அடேங்கப்பா... இன்னும் என்ன என்ன சொல்லுவீங்க..??

அடுத்த பகுதி எப்போ..???

Iyappan Krishnan said...

ஆயில்யன் said...

//இப்பிடியே போக மூணு வயசிலயே.. பெரும்பாலான திருக்குறள், சில சிலப்பதிகார, கம்பராமாயணச் செய்யுள்கள்,பாரதி, பாரதிதாசன் கவிதைகள்ன்னு சகலமும் சொல்ல ஆரம்பிச்சுட்டேன்..///

இலக்கியவாதி ராஜியின் அண்ணனாக இருப்பதில் பெருமையடையவேண்டுமே தவிர்த்து கேள்விகள் கேட்கப்பிடாது ஆயில்யன்.. அப்புறம் அவர்கள் ஒன்று இரண்டு மூன்று என உன் மீது பாடத் தொடங்கிடுவார்கள்!!

மின்னுது மின்னல் said...

க‌மெண்ட் போடாம‌ போக‌ மாட்டீங்க‌ன்னு தெரியும்.
//


ரைட்டு :)

Sanjai Gandhi said...

நீங்க ரொம்ப நல்லவங்க ராஜி.. :)

Iyappan Krishnan said...

//அவர் கிட்ட போயி..சார்.. நான் "தேராமன்னா.". சொல்வேன்.. "பொதியமலை விட்டெழுந்து" சொல்வேன்.. "துப்பார்க்க்குத் துப்பாய" சொல்வேன்.///
எனக்கு தேராமன்னா இப்பவே தெரிஞ்சாகனும்

சொல்லு சொல்லு

☀நான் ஆதவன்☀ said...

//( இதெல்லாம் திருக்குறள்..சிலப்பதிகாரம்ன்னு கூட அந்த வயசில தெரில):‍(//

எனக்கு இப்ப கூட தெரியாதேப்பா....

ஆயில்யன் said...

// ☀நான் ஆதவன்☀ said...

//( இதெல்லாம் திருக்குறள்..சிலப்பதிகாரம்ன்னு கூட அந்த வயசில தெரில):‍(//

எனக்கு இப்ப கூட தெரியாதேப்பா....//


அய்யகோ!

அய்யகோ!!

வலையில வந்து வுழுதே பார்ட்டீ!!! யாரு வந்து கும்ம போறாங்களோ? :)))

☀நான் ஆதவன்☀ said...

//எங்க அப்பா அடுத்த வருஷம் தான் அனுப்பனும்ன்னு சொல்ல..//

உங்கப்பா பரவாயில்லை. நான் வீட்ல பண்ணின சேட்டையில,எங்கம்மா இவனை ஸ்கூல்ல சேர்த்துவிட்டா தான் அடங்குவான்னு 4வயது வயசுல ஒன்னாப்பு சேர்த்து விட்டுடாங்க.16 வயசுல +2 முடிச்சுட்டேன் :P

☀நான் ஆதவன்☀ said...

நீங்களும் எளக்கியவாதின்னு நிரூபிச்சுடீங்க.

☀நான் ஆதவன்☀ said...

//
அய்யகோ!

அய்யகோ!!

வலையில வந்து வுழுதே பார்ட்டீ!!! யாரு வந்து கும்ம போறாங்களோ? :)))//

பாஸ் இதெல்லாம் ஓவரு. இங்க ப்ளாக் ஓனரை மட்டும் தான் கும்மனும். வேடிக்கை பார்க்க வந்தவங்களை எல்லாம் கும்ம கூடாது

Ungalranga said...

//நான் பேச ஆரம்பிச்ச காலத்திலயே என் தமிழ் இலக்கியப் பயணம் ஆரம்பமாயிடுச்சு..//

அப்போ அடுத்த கண்ணதாசன் பிறந்துட்டதா வதந்தி கிளம்பிச்சே..அது உங்களை பற்றி தானா?

கார்த்திகைப் பாண்டியன் said...

//நான் பேச ஆரம்பிச்ச காலத்திலயே என் தமிழ் இலக்கியப் பயணம் ஆரம்பமாயிடுச்சு..//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

//ஆனா அந்த அக்காவும் நானும் சேர்ந்துட்டு ஸ்கூல பண்ணின சேட்டைகள் ரொம்ப அதிகம்.. ஆனா எதிலயாவது மாட்டினாலும் பாவம் பெரிய புள்ளன்னு அவங்கதான் திட்டு வாங்குவாங்க..//

பயபுள்ள அப்பவே எவ்வளவு தெளிவா இருந்திருக்கு..:-))))

sivanes said...

சுட்டிப்பிள்ளை படிப்பில கெட்டின்னு இயற்கையை பார்த்துத்தான் சொன்னாங்களோ...! வாழ்த்துக்கள் பா..

gayathri said...

இந்த நிகழ்வெல்லாம் கூட எழுதி உங்களயெல்லாம் கொடுமை பண்ணலன்னா பிளாக் வச்சிருந்து என்ன பயன்..அதான் எழுதிட்டேன்

en arivu kanna therntuta raji thernthuta naanum ezuthuren en kathaiya

நட்புடன் ஜமால் said...

ஆனா அந்த அக்காவும் நானும் சேர்ந்துட்டு ஸ்கூல பண்ணின சேட்டைகள் ரொம்ப அதிகம்.. ஆனா எதிலயாவது மாட்டினாலும் பாவம் பெரிய புள்ளன்னு அவங்கதான் திட்டு வாங்குவாங்க..]]

அப்பவே தெளிவா இருந்து இருக்கிய

நட்புடன் ஜமால் said...

நான் பேச ஆரம்பிச்ச காலத்திலயே என் தமிழ் இலக்கியப் பயணம் ஆரம்பமாயிடுச்சு..]]


காப்பாத்துங்க காப்பாத்துங்க ...

மாதேவி said...

பள்ளிக்கால நினைவுகள் தொடரட்டும்.

கானா பிரபா said...

ஸ்கூல்ல போயி நான் இந்த சிலப்பதிகாரத்தையும், திருக்குறளையும் வச்சிகிட்டு போட்ட சீன்ல பால்வாடில இருக்கற ஆயம்மா எல்லாம் பயந்து போக‌ அதே வருஷம் ஒன்றாம் வகுப்புல தூக்கிப் போட்டிட்டாங்க .//

இந்த இடத்தில பேக்ரவுண்ட்ல வயலின் வச்சா ஓகேவா அல்லது ட்ராம்ஸ் அடிக்கணுமா

கலக்கலான நினைவுகள் பாஸ்

Ungalranga said...

//அவர் சொன்ன உடனே என் பிளாகர் புத்தி வேலை செய்ய ஆரம்பிச்சுது..//

சின்ன புத்தி
குறுக்கு புத்தி
குரூர புத்தி
திருட்டு புத்தி
கள்ள புத்தி..

இத எல்லாம் விட கொடுமையானது ப்ளாகர் புத்தி.. அது உங்களுக்கும் வேலை செய்ய ஆரம்பிச்சுடுச்சா?
போச்சு போ!!

Rajalakshmi Pakkirisamy said...

//இதெல்லாம் திருக்குறள்..சிலப்பதிகாரம்ன்னு கூட அந்த வயசில தெரில):‍(//

எனக்கு இப்ப கூட தெரியாதேப்பா//

Enakkum thaan...

nalla pathivu... ha ha ha

கானா பிரபா said...

அப்போ இருந்த அறிவை இப்போ காக்கா தூக்கிட்டு போயிடுச்சா என்பது போன்ற கேள்விகள் தடை செய்யப்படுகின்றன‌//

ஒகே

அப்போ இருந்த அறிவை இப்போ கங்காரு தூக்கிட்டு போயிடுச்சா??

தேவன் மாயம் said...

நான் பேச ஆரம்பிச்ச காலத்திலயே என் தமிழ் இலக்கியப் பயணம் ஆரம்பமாயிடுச்சு..எங்க அம்மா வீட்டு வேலைகள்னால என்னைப் பார்த்துக்கும் வேலைய எங்க அப்பாகிட்டயும் சித்திகிட்டயும் கொடுத்திருக்காங்க..எங்க அப்பா நிறைய இலக்கியக் கூட்டங்கள்ல பேசுவார். தமிழைப் பற்றி நிறையவே படிப்பார். அந்த நேரத்தில எங்க சித்தி தமிழ் இலக்கியம் முதுகலைப் படிச்சிட்டு இருந்திருக்காங்க.. வீட்ல இலக்கிய ஆறு கரைபுரண்டு ஓடிட்டு இருந்திருக்கு..அதனால "அம்மா சொல்லு", "அப்பா சொல்லு" சொல்லிக்குடுக்க வேண்டிய வயசில எனக்கு "அகர முதல சொல்லு" ன்னு சொல்லிக்குடுக்க ஆரம்பிச்சிட்டாங்க எங்க அப்பாவும் சித்தியும் . இப்பிடியே போக மூணு வயசிலயே.. பெரும்பாலான திருக்குறள், சில சிலப்பதிகார, கம்பராமாயணச் செய்யுள்கள்,பாரதி, பாரதிதாசன் கவிதைகள்ன்னு சகலமும் சொல்ல ஆரம்பிச்சுட்டேன்..///

உண்மையில் நல்ல சூழ்நிலையில் வளர்ந்து இருக்கிறீர்கள்!!

அபி அப்பா said...

// ☀நான் ஆதவன்☀ said...

//( இதெல்லாம் திருக்குறள்..சிலப்பதிகாரம்ன்னு கூட அந்த வயசில தெரில):‍(//

எனக்கு இப்ப கூட தெரியாதேப்பா....//

கிழிஞ்சுது கிருஷ்ணகிரி!!! நம்ம பார்ட்டியா நீங்க நல்லா இருங்க சாமீ!

குறை ஒன்றும் இல்லை !!! said...

ஓ இது பாகம் ஒண்ணா.. அப்போ இன்னும் இருக்கா?

குறை ஒன்றும் இல்லை !!! said...

அப்போ நீங்க ஒரு திருஞானசம்மந்தி!!!! ஏன்னா சின்ன வயசிலேயே எல்லாத்தையும் கரைச்சு (அட தமிழ சொன்னேங்க) குடிச்சிருக்கீங்களே!!

அபி அப்பா said...

என் அனுபவம் ஏற்கனவே எழுதிட்டனே!!

ஆனா இது சூப்பர் ராஜி! நல்ல எலக்கிய வாதி போல இருக்கே! ரைட்டு!

குறை ஒன்றும் இல்லை !!! said...

ஆமா ஒரு சந்தேகம்.. இப்போ உங்க பழைய நண்பர்கள் யாரும் வந்து சொல்ல மாட்டாங்கன்னு தானே இப்படி சொல்றீங்க?

குறை ஒன்றும் இல்லை !!! said...

//நான் பேச ஆரம்பிச்ச காலத்திலயே என் தமிழ் இலக்கியப் பயணம் ஆரம்பமாயிடுச்சு..//

இந்த இலக்கியவாதிகள் தொல்லை தாங்க முடியல!! நாங்க எல்லாம் பேச ஆரம்பிச்ச உடனே அத வாங்கி குடு, இத வாங்கி குடுன்னு தான் அழுதோம் ஆனா இங்கே ஒரு ஔவை தமிழ் கேட்டு அழுது இருக்கு..

குறை ஒன்றும் இல்லை !!! said...

//இப்பிடியே போக மூணு வயசிலயே.. பெரும்பாலான திருக்குறள், சில சிலப்பதிகார, கம்பராமாயணச் செய்யுள்கள்,பாரதி, பாரதிதாசன் கவிதைகள்ன்னு சகலமும் சொல்ல ஆரம்பிச்சுட்டேன்..///

சொல்ல ஆரம்பிச்சது இருக்கட்டும் .. அத எல்லாம் யாருங்க கேட்டாங்க? நான் அப்ப கேட்டத கேட்டேன்...

குறை ஒன்றும் இல்லை !!! said...

ஸ்கூல்ல போயி நான் இந்த சிலப்பதிகாரத்தையும், திருக்குறளையும் வச்சிகிட்டு போட்ட சீன்ல பால்வாடில இருக்கற ஆயம்மா எல்லாம் பயந்து போக‌ அதே வருஷம் ஒன்றாம் வகுப்புல தூக்கிப் போட்டிட்டாங்க .//

ஆமா அப்புரம் தமிழ் தெரிஞ்ச எல்லாருக்கும் இயற்கையா வர கோவம் தானே அது என்ன அப்போ இயற்கை மேல வந்து இருக்கு அவ்வளவு தான்!!!

Ungalranga said...

//குறை ஒன்றும் இல்லை !!! said...

ஓ இது பாகம் ஒண்ணா.. அப்போ இன்னும் இருக்கா?//

இந்த கொடுமை இன்னும் வேற தொடருமா? கொடும..சார்..கொடும..கொடும.>!

Ungalranga said...

//ஸ்கூல்ல போயி நான் இந்த சிலப்பதிகாரத்தையும், திருக்குறளையும் வச்சிகிட்டு போட்ட சீன்ல பால்வாடில இருக்கற ஆயம்மா எல்லாம் பயந்து போக‌ அதே வருஷம் ஒன்றாம் வகுப்புல தூக்கிப் போட்டிட்டாங்க//

ஆமா பின்ன..மத்த குழந்தைங்க அழாம சமர்த்தா இருக்குனும்னா இந்த தப்பெல்லாம் பண்ணித்தானே ஆவோணும்..!!

Anonymous said...

ஆ!!!!!!!!!!!!!!!!! நீங்க பள்ளிக்கூடம் போய் படிசீங்களா !!!!!!! ஆச்சிரியமா இருக்கு... சஞ்சய் வேற சொன்னாரே ??? எத நம்பறது?

T.V.ராதாகிருஷ்ணன் said...

//(அப்போ இருந்த அறிவை இப்போ காக்கா தூக்கிட்டு போயிடுச்சா என்பது போன்ற கேள்விகள் தடை செய்யப்படுகின்றன‌)//

என்ன ஆச்சுன்னு எங்களுக்குத்தான் தெரியுமே!! அப்புறம் ஏன் கேட்கப்போறோம்

ப்ரியமுடன் வசந்த் said...

//நான் பேச ஆரம்பிச்ச காலத்திலயே என் தமிழ் இலக்கியப் பயணம் ஆரம்பமாயிடுச்சு..//

இதெல்லாம் டூமச்....

நிஜமா நல்லவன் said...

:)

வெண்ணிற இரவுகள்....! said...

//இந்த விவரமெல்லாம் தெரியாத சொந்தக்காரங்க‌ "எந்த கிளாஸ் படிக்கறீங்க ரெண்டு பேரும்"ன்னு கேட்டுட்டு.. " ஏன் தமிழு? நீ பெயிலாயிட்டியா? தங்கச்சிகோட ஒரே கிளாஸ்ல படிக்கற"அப்படின்னு அந்த அக்காவக் கேப்பாங்க..அப்போ தமிழக்கா ஆகற டென்சன் இருக்கே... அப்பப்பா..அக்னி பகவேனே நேர்ல வந்து நிக்கற மாதிரி தான் இருக்கும்..:‍)

//

பாவம் உங்க அக்கா

Anonymous said...

ஓ, அருமை சகி, உன்ன நினைச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு.
கலக்குங்க..

விக்னேஷ்வரி said...

நான் பேச ஆரம்பிச்ச காலத்திலயே என் தமிழ் இலக்கியப் பயணம் ஆரம்பமாயிடுச்சு.. //

ஆரம்பமே டெரரா இருக்கு.

பெரும்பாலான திருக்குறள், சில சிலப்பதிகார, கம்பராமாயணச் செய்யுள்கள்,பாரதி, பாரதிதாசன் கவிதைகள்ன்னு சகலமும் சொல்ல ஆரம்பிச்சுட்டேன்.. //

பெரிய ஆளுங்க நீங்க.

இதெல்லாம் திருக்குறள்..சிலப்பதிகாரம்ன்னு கூட அந்த வயசில தெரில //

எனக்கு இப்போவும் தெரியல.

அப்போ இருந்த அறிவை இப்போ காக்கா தூக்கிட்டு போயிடுச்சா என்பது போன்ற கேள்விகள் தடை செய்யப்படுகின்றன‌ //

ஓகே, சைலன்ஸ்.

Thenammai Lakshmanan said...

"தேராமன்னா.". சொல்வேன்.. "பொதியமலை விட்டெழுந்து" சொல்வேன்.. "துப்பார்க்க்குத் துப்பாய"

suuper anbu
anbuvukkup pirantha naalaa

nuuraandu kaalam vaazka anbu

सुREஷ் कुMAர் said...

//
நான் பேச ஆரம்பிச்ச காலத்திலயே என் தமிழ் இலக்கியப் பயணம் ஆரம்பமாயிடுச்சு..
//
எங்க பயணம்.. தமிழ் இலக்கியப் பயணம் உங்க தொல்ல தாங்காதுன்னு சந்நியாசம் கெளம்பிடுச்சா..

सुREஷ் कुMAர் said...

//
நானும் ஸ்கூல் போறேன்னு அடம் பிடிக்க ஆரம்பிச்சாச்சி..
//
இப்டியுமா.. உங்க ஆர்வக்கோளாறுக்கு அளவே இல்லையா..

सुREஷ் कुMAர் said...

//
ஒரு நாள் அவர் அப்படி வந்தப்போ அவர் கிட்ட போயி..சார்.. நான் "தேராமன்னா.". சொல்வேன்.. "பொதியமலை விட்டெழுந்து" சொல்வேன்.. "துப்பார்க்க்குத் துப்பாய" சொல்வேன்.
//
இதுக்கப்புறம் அவர் உங்க வீட்டுபக்கமே வந்திருக்கமாட்டாரே..

सुREஷ் कुMAர் said...

//
இந்த நிகழ்வெல்லாம் கூட எழுதி உங்களயெல்லாம் கொடுமை பண்ணலன்னா பிளாக் வச்சிருந்து என்ன பயன்..அதான் எழுதிட்டேன்
//
ம்ம்.. உங்க நல்லெண்ணம் புரியுது..

सुREஷ் कुMAர் said...

//
"துப்பார்க்க்குத் துப்பாய" சொல்வேன்.
//
இப்போவே "துப்பார்க்க்குத் துப்பாய" மூணு டைம் திருப்பி சொல்லியாகனும்.. சொல்லுங்க கேப்போம்..

திருப்பினா சொல்றதுனா எந்த திருப்பினு தெரியும்ல..

सुREஷ் कुMAர் said...

100'க்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்..

Anonymous said...

படிக்கிறப்ப சந்தோசமா இருக்குங்க.......

*இயற்கை ராஜி* said...

ஆயில்யன் said...
//இப்பிடியே போக மூணு வயசிலயே.. பெரும்பாலான திருக்குறள், சில சிலப்பதிகார, கம்பராமாயணச் செய்யுள்கள்,பாரதி, பாரதிதாசன் கவிதைகள்ன்னு சகலமும் சொல்ல ஆரம்பிச்சுட்டேன்..///


அடேங்கப்பா!!!!

அப்புறம் யாரு கண்ட்ரோல் செஞ்சு நிப்பாட்டுனா பாஸ்...???

பெட்ரோல் தீர்ந்துபோயி வ‌ண்டி நின்னு போச்சி பாஸ்

*இயற்கை ராஜி* said...

ஆயில்யன் said...
//அண்ணா ஸ்கூல் போனதும் ..அந்த எழுத்துக்கள் மேலயே நானும் எழுதிப்பழக ஆரம்பிச்சுட்டேன்.///

குட் பிராக்டீஸ் !!!/


ஹி..ஹி.. தேங்ஸ்

*இயற்கை ராஜி* said...

ஆயில்யன் said...
//அண்ணா..சித்தி எல்லாரும் ஸ்கூல் போக நானும் ஸ்கூல் போகணும்ன்னு ஆசை வந்திருக்கு//

ஹய்யோ!!!!!!/


ப‌ய‌ப்ப‌டாதீங்க‌ பாஸ். ந‌ல்ல‌து தானே

*இயற்கை ராஜி* said...

/ஆயில்யன் said...
//அவர் கிட்ட போயி..சார்.. நான் "தேராமன்னா.". சொல்வேன்.. "பொதியமலை விட்டெழுந்து" சொல்வேன்.. "துப்பார்க்க்குத் துப்பாய" சொல்வேன்.///

இந்த சின்ன வயசுல எம்மாம் அறிவாளியா இருக்கீங்க நினைச்சு வியந்துபோயிருப்பாரே....!!??/


பின்ன‌? விய‌க்காம‌ விடுவோமா?

*இயற்கை ராஜி* said...

/ஆயில்யன் said...
//அதெல்லாம் இன்னொரு நாள் சொல்றேன் .///


அதுவும் கடந்து போகும் ! :)/

இனிதாய்க் க‌ட‌ந்துபோகும்ன்னு சொல்ல‌ணும் பாஸ்

*இயற்கை ராஜி* said...

/butterfly Surya said...
அடேங்கப்பா... இன்னும் என்ன என்ன சொல்லுவீங்க..??

அடுத்த பகுதி எப்போ..???/


இதுக்கு ஆன‌ டேமேஜ் எல்லாம் ச‌ரியான‌ப்புற‌ம்

*இயற்கை ராஜி* said...

Jeeves said...
ஆயில்யன் said...

//இப்பிடியே போக மூணு வயசிலயே.. பெரும்பாலான திருக்குறள், சில சிலப்பதிகார, கம்பராமாயணச் செய்யுள்கள்,பாரதி, பாரதிதாசன் கவிதைகள்ன்னு சகலமும் சொல்ல ஆரம்பிச்சுட்டேன்..///

இலக்கியவாதி ராஜியின் அண்ணனாக இருப்பதில் பெருமையடையவேண்டுமே தவிர்த்து கேள்விகள் கேட்கப்பிடாது ஆயில்யன்.. அப்புறம் அவர்கள் ஒன்று இரண்டு மூன்று என உன் மீது பாடத் தொடங்கிடுவார்கள்!!/



ஆமாம் அண்ணா..சொல்லிவைங்க‌

*இயற்கை ராஜி* said...

மின்னுது மின்னல் said...
க‌மெண்ட் போடாம‌ போக‌ மாட்டீங்க‌ன்னு தெரியும்.
//


ரைட்டு :)/

:‍)

*இயற்கை ராஜி* said...

/SanjaiGandhi said...
நீங்க ரொம்ப நல்லவங்க ராஜி.. :)/


தெரிஞ்சா ச‌ரி

*இயற்கை ராஜி* said...

/Jeeves said...
//அவர் கிட்ட போயி..சார்.. நான் "தேராமன்னா.". சொல்வேன்.. "பொதியமலை விட்டெழுந்து" சொல்வேன்.. "துப்பார்க்க்குத் துப்பாய" சொல்வேன்.///
எனக்கு தேராமன்னா இப்பவே தெரிஞ்சாகனும்

சொல்லு சொல்லு/


சொல்றேன்.போன் ப‌ண்ணுங்க‌

*இயற்கை ராஜி* said...

/☀நான் ஆதவன்☀ said...
//( இதெல்லாம் திருக்குறள்..சிலப்பதிகாரம்ன்னு கூட அந்த வயசில தெரில):‍(//

எனக்கு இப்ப கூட தெரியாதேப்பா..../


தெரிஞ்சிக்கோங்க‌

*இயற்கை ராஜி* said...

/ஆயில்யன் said...
// ☀நான் ஆதவன்☀ said...

//( இதெல்லாம் திருக்குறள்..சிலப்பதிகாரம்ன்னு கூட அந்த வயசில தெரில):‍(//

எனக்கு இப்ப கூட தெரியாதேப்பா....//


அய்யகோ!

அய்யகோ!!

வலையில வந்து வுழுதே பார்ட்டீ!!! யாரு வந்து கும்ம போறாங்களோ? :)))/


ஏன் பாஸ்.. பாவ‌ம்..அவ‌ர‌ விடுங்க‌

*இயற்கை ராஜி* said...

/☀நான் ஆதவன்☀ said...
//எங்க அப்பா அடுத்த வருஷம் தான் அனுப்பனும்ன்னு சொல்ல..//

உங்கப்பா பரவாயில்லை. நான் வீட்ல பண்ணின சேட்டையில,எங்கம்மா இவனை ஸ்கூல்ல சேர்த்துவிட்டா தான் அடங்குவான்னு 4வயது வயசுல ஒன்னாப்பு சேர்த்து விட்டுடாங்க.16 வயசுல +2 முடிச்சுட்டேன் /


ஓ..என் கேஸ்தானா நீங்க‌ளும்..குட்..குட்

*இயற்கை ராஜி* said...

/☀நான் ஆதவன்☀ said...
நீங்களும் எளக்கியவாதின்னு நிரூபிச்சுடீங்க./

ஹி..ஹி.

*இயற்கை ராஜி* said...

/☀நான் ஆதவன்☀ said...
//
அய்யகோ!

அய்யகோ!!

வலையில வந்து வுழுதே பார்ட்டீ!!! யாரு வந்து கும்ம போறாங்களோ? :)))//

பாஸ் இதெல்லாம் ஓவரு. இங்க ப்ளாக் ஓனரை மட்டும் தான் கும்மனும். வேடிக்கை பார்க்க வந்தவங்களை எல்லாம் கும்ம கூடாது/


உங்க‌ளுக்குப் போயி ச‌ப்போர்ட் ப‌ண்ணுனேனே..என்னை.....

*இயற்கை ராஜி* said...

/ரங்கன் said...
//நான் பேச ஆரம்பிச்ச காலத்திலயே என் தமிழ் இலக்கியப் பயணம் ஆரம்பமாயிடுச்சு..//

அப்போ அடுத்த கண்ணதாசன் பிறந்துட்டதா வதந்தி கிளம்பிச்சே..அது உங்களை பற்றி தானா?/

ம்ம்ம்.. க‌ரெக்ட்டு

*இயற்கை ராஜி* said...

/கார்த்திகைப் பாண்டியன் said...
//நான் பேச ஆரம்பிச்ச காலத்திலயே என் தமிழ் இலக்கியப் பயணம் ஆரம்பமாயிடுச்சு..//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் /


இதுக்கு ச‌ந்தோச‌ப்ப‌ட‌ணும்

//ஆனா அந்த அக்காவும் நானும் சேர்ந்துட்டு ஸ்கூல பண்ணின சேட்டைகள் ரொம்ப அதிகம்.. ஆனா எதிலயாவது மாட்டினாலும் பாவம் பெரிய புள்ளன்னு அவங்கதான் திட்டு வாங்குவாங்க..//

பயபுள்ள அப்பவே எவ்வளவு தெளிவா இருந்திருக்கு..:-))))/


ஹி..ஹி../

*இயற்கை ராஜி* said...

சிவனேசு said...
சுட்டிப்பிள்ளை படிப்பில கெட்டின்னு இயற்கையை பார்த்துத்தான் சொன்னாங்களோ...! வாழ்த்துக்கள் பா../

ந‌ன்றிபா

*இயற்கை ராஜி* said...

gayathri said...
இந்த நிகழ்வெல்லாம் கூட எழுதி உங்களயெல்லாம் கொடுமை பண்ணலன்னா பிளாக் வச்சிருந்து என்ன பயன்..அதான் எழுதிட்டேன்

en arivu kanna therntuta raji thernthuta naanum ezuthuren en kathaiya/


ம்ம்..எழுதுங்க‌ காய‌த்ரி

*இயற்கை ராஜி* said...

/ நட்புடன் ஜமால் said...
ஆனா அந்த அக்காவும் நானும் சேர்ந்துட்டு ஸ்கூல பண்ணின சேட்டைகள் ரொம்ப அதிகம்.. ஆனா எதிலயாவது மாட்டினாலும் பாவம் பெரிய புள்ளன்னு அவங்கதான் திட்டு வாங்குவாங்க..]]

அப்பவே தெளிவா இருந்து இருக்கிய/


ஆமாம்..அண்ணா:-)

*இயற்கை ராஜி* said...

/நட்புடன் ஜமால் said...
நான் பேச ஆரம்பிச்ச காலத்திலயே என் தமிழ் இலக்கியப் பயணம் ஆரம்பமாயிடுச்சு..]]


காப்பாத்துங்க காப்பாத்துங்க .../

முடியாது..முடியாது

*இயற்கை ராஜி* said...

/ மாதேவி said...
பள்ளிக்கால நினைவுகள் தொடரட்டும்./

தொட‌ரும்..:‍)

*இயற்கை ராஜி* said...

/கானா பிரபா said...
ஸ்கூல்ல போயி நான் இந்த சிலப்பதிகாரத்தையும், திருக்குறளையும் வச்சிகிட்டு போட்ட சீன்ல பால்வாடில இருக்கற ஆயம்மா எல்லாம் பயந்து போக‌ அதே வருஷம் ஒன்றாம் வகுப்புல தூக்கிப் போட்டிட்டாங்க .//

இந்த இடத்தில பேக்ரவுண்ட்ல வயலின் வச்சா ஓகேவா அல்லது ட்ராம்ஸ் அடிக்கணுமா

கலக்கலான நினைவுகள் பாஸ்/

தாரை த‌ப்ப‌ட்டை அடிக்காம‌ இருந்தா ச‌ரி
ந‌ன்றி பாஸ்

*இயற்கை ராஜி* said...

ர/ங்கன் said...
//அவர் சொன்ன உடனே என் பிளாகர் புத்தி வேலை செய்ய ஆரம்பிச்சுது..//

சின்ன புத்தி
குறுக்கு புத்தி
குரூர புத்தி
திருட்டு புத்தி
கள்ள புத்தி..

இத எல்லாம் விட கொடுமையானது ப்ளாகர் புத்தி.. அது உங்களுக்கும் வேலை செய்ய ஆரம்பிச்சுடுச்சா?
போச்சு போ!!
/


செஞ்ச‌துனால‌தானே பிளாக்கே ஆர‌ம்பிச்சேன்

*இயற்கை ராஜி* said...

/இராஜலெட்சுமி பக்கிரிசாமி said...
//இதெல்லாம் திருக்குறள்..சிலப்பதிகாரம்ன்னு கூட அந்த வயசில தெரில):‍(//

எனக்கு இப்ப கூட தெரியாதேப்பா//

Enakkum thaan...

nalla pathivu... ha ha hஅ/


உன‌க்கு என்ன‌ தான் ஒழுங்கா தெரியும்.. என்னைக் க‌லாய்க்க‌ர‌தைத் த‌விர‌

*இயற்கை ராஜி* said...

/கானா பிரபா said...
அப்போ இருந்த அறிவை இப்போ காக்கா தூக்கிட்டு போயிடுச்சா என்பது போன்ற கேள்விகள் தடை செய்யப்படுகின்றன‌//

ஒகே

அப்போ இருந்த அறிவை இப்போ கங்காரு தூக்கிட்டு போயிடுச்சா??/


ஆமாம்.. கொண்டு வ‌ந்து உங்க‌ கிட்ட‌தான் குடுத்துச்சாம். ஒழுங்கா திருப்பிக் குடுங்க‌ பாஸ்

*இயற்கை ராஜி* said...

/தேவன் மாயம் said...


உண்மையில் நல்ல சூழ்நிலையில் வளர்ந்து இருக்கிறீர்கள்!!
//

ஆமாம் டாக்ட‌ர். என் பெற்றோர்க‌ளுக்கு ந‌ன்றி

*இயற்கை ராஜி* said...

/அபி அப்பா said...
// ☀நான் ஆதவன்☀ said...

//( இதெல்லாம் திருக்குறள்..சிலப்பதிகாரம்ன்னு கூட அந்த வயசில தெரில):‍(//

எனக்கு இப்ப கூட தெரியாதேப்பா....//

கிழிஞ்சுது கிருஷ்ணகிரி!!! நம்ம பார்ட்டியா நீங்க நல்லா இருங்க சாமீ!/

வாங்க‌ அண்ணா. எப்ப‌டி இருக்கீங்க‌

*இயற்கை ராஜி* said...

/குறை ஒன்றும் இல்லை !!! said...
ஓ இது பாகம் ஒண்ணா.. அப்போ இன்னும் இருக்கா?/

யெஸ்ஸு

*இயற்கை ராஜி* said...

/குறை ஒன்றும் இல்லை !!! said...
அப்போ நீங்க ஒரு திருஞானசம்மந்தி!!!! ஏன்னா சின்ன வயசிலேயே எல்லாத்தையும் கரைச்சு (அட தமிழ சொன்னேங்க) குடிச்சிருக்கீங்களே!!/

அட‌ங்க‌ மாட்டீங்க‌ளா

*இயற்கை ராஜி* said...

/அபி அப்பா said...
என் அனுபவம் ஏற்கனவே எழுதிட்டனே!!

ஆனா இது சூப்பர் ராஜி! நல்ல எலக்கிய வாதி போல இருக்கே! ரைட்டு!/

ஹி..ஹி..

*இயற்கை ராஜி* said...

/குறை ஒன்றும் இல்லை !!! said...
ஆமா ஒரு சந்தேகம்.. இப்போ உங்க பழைய நண்பர்கள் யாரும் வந்து சொல்ல மாட்டாங்கன்னு தானே இப்படி சொல்றீங்க?/

அட‌ப்பாவி ம‌க்கா.. வேணும்ன்னா அந்த‌ HM அட்ர‌ஸ் த‌ர்றேன். கேட்டுகோங்க‌

*இயற்கை ராஜி* said...

/ குறை ஒன்றும் இல்லை !!! said...
//நான் பேச ஆரம்பிச்ச காலத்திலயே என் தமிழ் இலக்கியப் பயணம் ஆரம்பமாயிடுச்சு..//

இந்த இலக்கியவாதிகள் தொல்லை தாங்க முடியல!! நாங்க எல்லாம் பேச ஆரம்பிச்ச உடனே அத வாங்கி குடு, இத வாங்கி குடுன்னு தான் அழுதோம் ஆனா இங்கே ஒரு ஔவை தமிழ் கேட்டு அழுது இருக்கு../


ந‌ல்ல‌புள்ளைய‌ப் பார்த்து பொறாமைப்ப‌ட‌க்கூடாது

*இயற்கை ராஜி* said...

/குறை ஒன்றும் இல்லை !!! said...
//இப்பிடியே போக மூணு வயசிலயே.. பெரும்பாலான திருக்குறள், சில சிலப்பதிகார, கம்பராமாயணச் செய்யுள்கள்,பாரதி, பாரதிதாசன் கவிதைகள்ன்னு சகலமும் சொல்ல ஆரம்பிச்சுட்டேன்..///

சொல்ல ஆரம்பிச்சது இருக்கட்டும் .. அத எல்லாம் யாருங்க கேட்டாங்க? நான் அப்ப கேட்டத கேட்டேன்.../


எங்க‌ அண்ணா த‌லையெழுத்து அது

*இயற்கை ராஜி* said...

/குறை ஒன்றும் இல்லை !!! said...
ஸ்கூல்ல போயி நான் இந்த சிலப்பதிகாரத்தையும், திருக்குறளையும் வச்சிகிட்டு போட்ட சீன்ல பால்வாடில இருக்கற ஆயம்மா எல்லாம் பயந்து போக‌ அதே வருஷம் ஒன்றாம் வகுப்புல தூக்கிப் போட்டிட்டாங்க .//

ஆமா அப்புரம் தமிழ் தெரிஞ்ச எல்லாருக்கும் இயற்கையா வர கோவம் தானே அது என்ன அப்போ இயற்கை மேல வந்து இருக்கு அவ்வளவு தான்!!!/


வேணாம்..:-(

*இயற்கை ராஜி* said...

ரங்கன் said...
//குறை ஒன்றும் இல்லை !!! said...

ஓ இது பாகம் ஒண்ணா.. அப்போ இன்னும் இருக்கா?//

இந்த கொடுமை இன்னும் வேற தொடருமா? கொடும..சார்..கொடும..கொடும.>!/

ம்ம்ம்.. எல்லாம் என் நேர‌ம்

*இயற்கை ராஜி* said...

/பழமைபேசி said...
வாழ்த்துகள்!/


ந‌ன்றி

*இயற்கை ராஜி* said...

ரங்கன் said...
//ஸ்கூல்ல போயி நான் இந்த சிலப்பதிகாரத்தையும், திருக்குறளையும் வச்சிகிட்டு போட்ட சீன்ல பால்வாடில இருக்கற ஆயம்மா எல்லாம் பயந்து போக‌ அதே வருஷம் ஒன்றாம் வகுப்புல தூக்கிப் போட்டிட்டாங்க//

ஆமா பின்ன..மத்த குழந்தைங்க அழாம சமர்த்தா இருக்குனும்னா இந்த தப்பெல்லாம் பண்ணித்தானே ஆவோணும்..!!/


ம்ம்ம்..

*இயற்கை ராஜி* said...

/mayil said...
ஆ!!!!!!!!!!!!!!!!! நீங்க பள்ளிக்கூடம் போய் படிசீங்களா !!!!!!! ஆச்சிரியமா இருக்கு... சஞ்சய் வேற சொன்னாரே ??? எத நம்பறது?/

அவ‌ர் எது சொன்னாலும் ந‌ம்ப‌ கூடாதுன்னு உங்க‌ளுக்கு தெரிலியே:-(

*இயற்கை ராஜி* said...

/T.V.Radhakrishnan said...
//(அப்போ இருந்த அறிவை இப்போ காக்கா தூக்கிட்டு போயிடுச்சா என்பது போன்ற கேள்விகள் தடை செய்யப்படுகின்றன‌)//

என்ன ஆச்சுன்னு எங்களுக்குத்தான் தெரியுமே!! அப்புறம் ஏன் கேட்கப்போறோம்/

அண்ணா,.. இதை நான் எந்த‌ அர்த்த‌துல‌ எடுத்துக்க‌:-))

*இயற்கை ராஜி* said...

/பிரியமுடன்...வசந்த் said...
//நான் பேச ஆரம்பிச்ச காலத்திலயே என் தமிழ் இலக்கியப் பயணம் ஆரம்பமாயிடுச்சு..//

இதெல்லாம் டூமச்../

ஹி..ஹி.. நிஜ‌ம் வ‌ச‌ந்த்

*இயற்கை ராஜி* said...

/நிஜமா நல்லவன் said...
:)/


:‍) வாங்க‌ விவ‌சாயி

*இயற்கை ராஜி* said...

/வெண்ணிற இரவுகள்....! said...
//இந்த விவரமெல்லாம் தெரியாத சொந்தக்காரங்க‌ "எந்த கிளாஸ் படிக்கறீங்க ரெண்டு பேரும்"ன்னு கேட்டுட்டு.. " ஏன் தமிழு? நீ பெயிலாயிட்டியா? தங்கச்சிகோட ஒரே கிளாஸ்ல படிக்கற"அப்படின்னு அந்த அக்காவக் கேப்பாங்க..அப்போ தமிழக்கா ஆகற டென்சன் இருக்கே... அப்பப்பா..அக்னி பகவேனே நேர்ல வந்து நிக்கற மாதிரி தான் இருக்கும்..:‍)

//

பாவம் உங்க அக்கா/


ஆமாம்ங்க‌

*இயற்கை ராஜி* said...

/பதுமை said...
ஓ, அருமை சகி, உன்ன நினைச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு.
கலக்குங்க../


ந‌ன்றி..ந‌ன்றி..

*இயற்கை ராஜி* said...

/விக்னேஷ்வரி said...
நான் பேச ஆரம்பிச்ச காலத்திலயே என் தமிழ் இலக்கியப் பயணம் ஆரம்பமாயிடுச்சு.. //

ஆரம்பமே டெரரா இருக்கு./



பெரும்பாலான திருக்குறள், சில சிலப்பதிகார, கம்பராமாயணச் செய்யுள்கள்,பாரதி, பாரதிதாசன் கவிதைகள்ன்னு சகலமும் சொல்ல ஆரம்பிச்சுட்டேன்.. //

பெரிய ஆளுங்க நீங்க.

இதெல்லாம் திருக்குறள்..சிலப்பதிகாரம்ன்னு கூட அந்த வயசில தெரில //

எனக்கு இப்போவும் தெரியல.

அப்போ இருந்த அறிவை இப்போ காக்கா தூக்கிட்டு போயிடுச்சா என்பது போன்ற கேள்விகள் தடை செய்யப்படுகின்றன‌ //

ஓகே, சைலன்ஸ்.//


ம்ம்ம்.. உங்க‌ளுக்கு ப‌தில் சொல்லி அதிக‌மா டேமேஜ் ஆக‌ நான் விரும்ப‌லை:‍))))

*இயற்கை ராஜி* said...

/thenammailakshmanan said...
"தேராமன்னா.". சொல்வேன்.. "பொதியமலை விட்டெழுந்து" சொல்வேன்.. "துப்பார்க்க்குத் துப்பாய"

suuper anbu
anbuvukkup pirantha naalaa

nuuraandu kaalam vaazka anbஉ/


வ‌ருகைக்கு ந‌ன்றிங்க‌

*இயற்கை ராஜி* said...

/सुREஷ் कुMAர் said...
//
நான் பேச ஆரம்பிச்ச காலத்திலயே என் தமிழ் இலக்கியப் பயணம் ஆரம்பமாயிடுச்சு..
//
எங்க பயணம்.. தமிழ் இலக்கியப் பயணம் உங்க தொல்ல தாங்காதுன்னு சந்நியாசம் கெளம்பிடுச்சா../


வாங்க‌ய்யா..வாங்க‌

*இயற்கை ராஜி* said...

/सुREஷ் कुMAர் said...
//
நானும் ஸ்கூல் போறேன்னு அடம் பிடிக்க ஆரம்பிச்சாச்சி..
//
இப்டியுமா.. உங்க ஆர்வக்கோளாறுக்கு அளவே இல்லையா../

இல்லே..இல்லே

*இயற்கை ராஜி* said...

/सुREஷ் कुMAர் said...
//
ஒரு நாள் அவர் அப்படி வந்தப்போ அவர் கிட்ட போயி..சார்.. நான் "தேராமன்னா.". சொல்வேன்.. "பொதியமலை விட்டெழுந்து" சொல்வேன்.. "துப்பார்க்க்குத் துப்பாய" சொல்வேன்.
//
இதுக்கப்புறம் அவர் உங்க வீட்டுபக்கமே வந்திருக்கமாட்டாரே../


நான்தான் அவ‌ர் பெட் ஸ்டூட‌ண்ட்..தெரியுமா

*இயற்கை ராஜி* said...

/ सुREஷ் कुMAர் said...
//
இந்த நிகழ்வெல்லாம் கூட எழுதி உங்களயெல்லாம் கொடுமை பண்ணலன்னா பிளாக் வச்சிருந்து என்ன பயன்..அதான் எழுதிட்டேன்
//
ம்ம்.. உங்க நல்லெண்ணம் புரியுது../


ம்ம்..புரிஞ்சா ச‌ரி

*இயற்கை ராஜி* said...

/सुREஷ் कुMAர் said...
//
"துப்பார்க்க்குத் துப்பாய" சொல்வேன்.
//
இப்போவே "துப்பார்க்க்குத் துப்பாய" மூணு டைம் திருப்பி சொல்லியாகனும்.. சொல்லுங்க கேப்போம்..

திருப்பினா சொல்றதுனா எந்த திருப்பினு தெரியும்ல../


ந‌ல்ல‌வேளை... நீங்க‌ அங்க‌ இல்ல‌

*இயற்கை ராஜி* said...

/सुREஷ் कुMAர் said...
100'க்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்../

லேட்டான ந‌ன்றி.. ந‌ன்றி

*இயற்கை ராஜி* said...

/Anonymous said...
படிக்கிறப்ப சந்தோசமா இருக்குங்க......./
உங்க‌ பேரைப்போட்டிருந்தா என‌க்கு ச‌ந்தோச‌மா இருந்திருக்கும்