ம்ம்ம்ம்ம்

Sunday, September 5, 2010
தென்றல் வீசும் மாலையிலே
சாளரச் சாரலிலே
நேரம் கடத்திய வேளையிலே
உதித்ததொரு சூரியனே

உன் கதிர் கொண்டு
மனம் கவர்ந்து
செயல் தடுத்து
ஆட்கொண்டவனே

உயிர் கொடுக்கும்
பகலவனே
உயிர் எடுக்கும்
மாயம் கற்றது எப்போது

நிலமுறங்கும் பொழுதினிலும்
நிலவுதிக்கும் நேரத்திலும்
கனவிலும் நனவிலும்
காட்சி தருபவனே

மற்றவர் காயத்திற்கு
மருந்தாகும் நீ
என் காய‌த்திற்கு ம‌ட்டும்
கார‌ணமானாயே

கவிதைக் கடலின் பேரூழி
எனக்குக் கற்றுத் தருவது
உன்னை மறக்கும் வலியா
உன் நினைவை மறைக்கும் வழியா?

.

6 comments:

*இயற்கை ராஜி* said...

மக்களே.. கவிதை போட்டு ரொம்ப நாள் ஆச்சு..அதனால ஒரு கவிதை.. :)

sakthi said...

வரிகள் நல்லாயிருக்கு ராஜி

'பரிவை' சே.குமார் said...

//கவிதைக் கடலின் பேரூழி
எனக்குக் கற்றுத் தருவது
உன்னை மறக்கும் வலியா
உன் நினைவை மறைக்கும் வழியா?//

வரிகள் அருமை.
கவிதை மாதிரி இல்லைங்க. அருமையான கவிதைங்க..!

ஆரூரன் விசுவநாதன் said...

ம்ம்ம்ம்.......

☀நான் ஆதவன்☀ said...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் :)

//மக்களே.. கவிதை போட்டு ரொம்ப நாள் ஆச்சு..அதனால ஒரு கவிதை.. :)//

அதுக்கு கவிதையில்ல போடனும்? ஏன் மனப்பாட செய்யுளெல்லாம் போடுறீங்க? :)

Anonymous said...

ம்ம்ம்ம்