வணக்க்ம

Tuesday, October 16, 2018
வணக்கம். அறிஞ்சவங்க தெரிஞ்சவங்க புரிஞ்சவங்க புரியாதவங்க எல்லாரும் நல்லா இருக்கீங்களா? ரொம்ப நாளா .....மாசமா ....இல்லல்ல.. ரொம்ப வருஷமா பூட்டிக்கிடந்த வீடு திடீர்னு திறந்து நடமாட்டமா இருந்தா 'இதென்ன புதுசா இருக்கு' னு பாககறவங்க விழி விரிவது இயற்கை.அதே சமயம் அந்த வீட்டு சொந்தக்காரங்களுக்கு வீட்டின் ஒவ்வொரு அடியும் ஒரு நினைவைத் தூண்டும்.அவை மகிழவும்,நெகிழவும் வைக்கும்.சூழல் மாற்ற்ங்கள் நம்ம வீடுதானா என சந்தேகப்படவும் வைக்கும்.இந்த இயற்கை அந்த மாதிரிதான் வீட்டை தூசி தட்டிகிட்டிருக்கேன். எனக்கான பொக்கிஷங்களும் கிடைக்கலாம்..அசடு வழிதலும் நடக்கலாம்.எல்லாத்தையும் ஒரு பார்வை பாத்துட்டு இங்கதான் சுத்திகிட்டு இருப்பேன்.அடிக்கடி உரையாடுவோம். அடடே... வா! வா!! னு வரவேற்கறவங்க.. இப்போ எதுக்கு வந்தே? னுமுகத்தை சுருக்கறவங்க... மறுபடியும்  சிக்கிடுச்சுடா ஆடு னு பிரியாணிக்கு பிளான் போடறவங்க, தூரத்துலருந்தே எட்டிப் பாத்துட்டு அப்படியே போறவங்க...இது யாரோ புதுசா இருக்கே..நம்ம ஏரியாக்கு வந்துருக்காங்க ஒரு ஹலோ சொல்லலாம்னு நினைச்சு நட்பை வளர்க்கறவங்க..எல்லாரையும் மனமலர்களால் வரவேற்கிறேன்.    

2 comments:

ராஜி said...

ஹாய்! ஹாய்!

நட்போடு இணைந்திருப்போம் தோழி

*இயற்கை ராஜி* said...

நன்றிங்க ராஜி.... ராஜி with ராஜி..சூப்பருங்க