
இன்னிக்கு வலையுலக மக்கள் 2 பேருக்கு பிறந்த நாள்.
ஒருத்தர்.....
சக்தி (அக்கா)...வீட்டுப் புறாங்கிற கவிதை தோட்டத்தின் ஏகபோக சொந்தக்காரங்க
வீட்டுப்புறாங்கிற வலைப்பூவை நீங்க படிச்சிருக்கீங்களா? படிக்கலைனா கீழே கிளிக் பண்ணி படிச்சி பாருங்க..
வீட்டுப்புறா
கவிதைகளின் சங்கமன்.பின்னூட்டங்களின் புகலிடம். கவிதைங்கிற பேர்ல 4.5 வரி எழுதறத்துக்குள்ளயே எனக்கெல்லாம் பைத்தியமே புடிச்சிடுது..வலையுலக விட்டே ஓடிடலாமான்னு யோசிக்க ஆரம்பிச்சிடறேன்.ஆனா இவங்க கவிதையா பொளந்து கட்டறாங்க.
அதே மாதிரி இவங்களுக்கு வர்ற பின்னூட்ட்ங்கள எண்ணிப் பார்த்து என் பிளாக்ல பின்னூட்டப் பெட்டியையே மூடிடலாமான்னு பாக்கறேன்... ( நான் பின்னூட்டங்களை அனுமதிக்கறதில்லைன்னு சமாளிக்கல்லாம் பாருங்க..அதுக்கு தான்)
எப்படி இவ்ளோ திறமை இவங்களுக்கு மட்டும்ன்னு தெரிஞ்சிக்கலாம்ன்னு ..அக்கா.. நீங்க எந்த நேரத்தில பொறந்தீங்கன்னு கேட்டப்பதான் தெரிஞ்சிது..அக்காக்கு இன்னிக்கு பிறந்த நாள் .ன்னு..
அதனால மக்களே எல்லாரும் சக்திக்கு ஜோரா ஒரு ஹேப்பி பர்த் டே பாட்டு பாடிட்டு போங்க...
இன்னொருத்தர்.. தூயா..
அவங்களப் பத்தி நான் ஏதும் சொல்லப்போனா தமிழ் வலையுலகமே திரண்டு என்கிட்ட சண்டைக்கு வந்திடும்.. எங்க பொண்ணைப் பத்தி எங்களுக்கே அறிமுகமான்னு...ஏன்னா அவங்க வலையுலகில் பெரும்பாலானோரின் செல்லம் அவங்க.
அதனால அவங்களுக்கு வாழ்த்து மட்டும் சொல்லிக்கறேன்

| Vaa Vaa En Dhevada... |


