கவிதை மாதிரி..
Monday, May 9, 2011
அதிகாலைச் சூரியனே
நட்சத்திரப் போர்வையை பத்திரமாய் மடித்துவை
எங்கள் ஓட்டைக் குடிசை குழந்தைகளுக்கு
வாய்த்த அழகிய கிலுகிலுப்பை அது
********************************************************************
மனமெனும் கடலில்
உன் நினைவெனும்
ஆயிரம் நட்சத்திரங்கள்..
கரையோரத்தில் நான்
அவை வானின் பிரதிபலிப்புகள்
எனும் உண்மை அறியாமல்
.
நட்சத்திரப் போர்வையை பத்திரமாய் மடித்துவை
எங்கள் ஓட்டைக் குடிசை குழந்தைகளுக்கு
வாய்த்த அழகிய கிலுகிலுப்பை அது
********************************************************************
மனமெனும் கடலில்
உன் நினைவெனும்
ஆயிரம் நட்சத்திரங்கள்..
கரையோரத்தில் நான்
அவை வானின் பிரதிபலிப்புகள்
எனும் உண்மை அறியாமல்
.
Labels:
கவிதை மாதிரி..
அநாகரிகம்
Friday, May 6, 2011
அடுத்த கண்டத்தின் அடக்கு முறைகளுக்கு
ஆவேசப்பட்டாலும்
காணாத் தொலைவிலிருக்கும் என்
இனத்தவன் கொடுமைக்குத் துடித்தாலும்
வேறொரு மாநில வேங்கைகளுக்குப்
பலியான மனிதனுக்கு அக்கறைப்பட்டாலும்
சமூக அக்கறையாக பார்க்கப்படும்
என் ஆத்திரம் அண்டை வீட்டு
ஆணுக்கு ஆதரவாக வரும்போது
மட்டும் அநாகரிகமாகிறது
.
ஆவேசப்பட்டாலும்
காணாத் தொலைவிலிருக்கும் என்
இனத்தவன் கொடுமைக்குத் துடித்தாலும்
வேறொரு மாநில வேங்கைகளுக்குப்
பலியான மனிதனுக்கு அக்கறைப்பட்டாலும்
சமூக அக்கறையாக பார்க்கப்படும்
என் ஆத்திரம் அண்டை வீட்டு
ஆணுக்கு ஆதரவாக வரும்போது
மட்டும் அநாகரிகமாகிறது
.
Labels:
கவிதை மாதிரி..
Subscribe to:
Posts (Atom)




