ஒரு விதிமுறை மீறல்

Tuesday, July 28, 2009
இப்போ சமீபமா வலையுலகத்தில சுத்தரது நட்பு விருது.அது அங்க இங்க சுத்திட்டு இருக்கும் போது அப்படியே எனக்கும் வந்திட்டுது.என்கிட்ட அந்த விருதை கொண்டுவந்து தந்தவங்க ரெண்டு பேர்.

Dr.தேவன்மாயம் மற்றும் தாரணிப்பிரியா..


இந்த விருதை என்னோட மத்த நட்புகளுக்குத் தரணுமாம்..

நான் தர ஆசைப் படறவங்க..

அப்துல்லா அண்ணா
அபி அப்பா..
அன்புட‌ன் அருணா அக்கா
அன்பு மதி
ஆயில்ய‌ன்
ஜமால் அண்ணா
ஜோச‌ப் பால்ராஜ்
கார்த்திகைப் பாண்டிய‌ன்
ப‌துமை
ராஜி
ராஜ்குமார்
சக்தி செல்வி
சஞ்ச‌ய்
ஸ்வாமி ஓம்கார்
T.V.Radhakrishnan அண்ணா
விக்னேஷ்வ‌ரி
((நட்பு அவார்டுன்னு சொல்லிட்டு அண்ணா,அக்காக்கெல்லாம் குடுத்துருக்கேன்னு பாக்கறீங்களா...உறவுகளும் நட்புணர்வோடு இருப்பதால்தான் அவை நிலைத்திருக்கின்றன.))
ம‌ற்றும்
Dr.தேவ‌ன் மாய‌ம்
தார‌ணிப்பிரியா(இவ‌ங்க‌ளோட‌ ந‌ட்பை என‌க்கு விருது குடுத்து தெரிவிச்சிட்டாங்க‌. என் ந‌ட்பை வெளிக்காட்ட‌ நான் இவ‌ங்க‌ளுக்கும் த‌ரேன்)

விதிமுறை மீறல்ன்னு யாரும் திட்டாதீங்க‌..பொழ‌ச்சிப் போன்னு விட்டுடுங்க‌..


விருது வாங்கினவங்கெல்லாம் வழக்கம்போல உங்க வலைப்பூவுல இதைப் போட்டு உங்க் ஃப்ரண்ட்ஸ்க்கு இதைப் பாஸ் பண்ணிடுங்க‌

இதில் நான் தராத‌ என்னோட நட்புக‌ளுக்கெல்லாம் இவங்க வழியா விருது வந்து சேரும்.ஏன்னா அவங்கெல்லாம் இவங்களுக்கும் ஃப்ரண்ட்ஸ்

.

ஆதரவற்றோர் இல்லங்களுக்குச் செல்வது மனநிறைவைத் தருகிறதா?

Monday, July 27, 2009
இன்றைய அவசர உலகில் ஒரு குடும்பத்தில் இருக்கும் 3,4 பேர்களது, தேவையைப் பூர்த்தி செய்வதே கடினமாக இருக்கும் காலகட்டத்தில்,எண்ணிக்கையில் அதிகமான ஆதரவற்றோரைப் பராமரிக்கும் இல்லங்கள் நிலை என்னவாக இருக்கும் என்பதை நினைத்துப் பார்ப்பதே கஷ்டம்தான். இதை உணர்ந்து நம்மில் பலர், பிறந்தநாள், திருமண நாள் மற்றும் பண்டிகை நாட்களில் ஆதரவற்றோர் வாழும் இல்லங்களுக்குப் போவதும் அவர்களுக்கு உதவிகள் தருவதும் வாடிக்கையாகக் கொண்டிரருக்கின்றனர்.அத்தகைய செயல் அவர்களுக்கு மிகவும் பயனுள்ளது,அவர்களது அடிப்படைத்தேவைகள் நிறைவேறுகின்றன‌ என்றாலும்,அதுஅவ்ர்களுக்கு மனநிறைவு தரும் செயலாக இருக்குமா?
அதனை மன நிறைவுதரும் செயலாக எப்படி மாற்றலாம்?
1.அந்த அமைப்பு நிர்வாகிகளுடன் முதலில் தொடர்பு கொண்டு அவர்களின் தேவை என்ன எனத் தெரிந்து கொள்ளுங்கள்.உங்களுக்கு விருப்பமானதைக் கொடுப்பதை விட, அவர்களுக்குத் தேவையானதைக் கொடுப்பது சிறந்தது.

2.இனிப்பு,பழவகைகள் அல்லது ஏதேனும் பொருட்களை வரிசையில் நிறுத்தி கொடுக்காதீர்கள்.அவ்வமைப்பு நிர்வாகிகளிடம் கொடுத்து அவர்கள் மூலமாகவே பகிர்ந்தளியுங்கள்.முன்பின் தெரியாத ஒருவரிடம் அவ்வாறு வாங்குவது அவர்களின் தன்மானத்தை காயப்படுத்தலாம்

3.பழைய ஆடைகள், பழைய நோட்டுகள் போன்றவற்றைத் தரும்போது அவை உபயோகிக்கும் நிலையில் உள்ளதா என ஒன்றுக்கு இரண்டுமுறை உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள். ஆடைகளைத் துவைத்து, கிழிந்திருப்பின் அவற்றைத் தைத்துக் கொடுங்கள்.பல நோட்டுகளில் இருக்கும் உபயோகப்படுத்தாத பக்கங்களை ஒரே நோட்டாக பைண்ட் செய்தோ அல்லது தைத்தோ கொடுங்கள்.

4.தீபாவளி,பொங்கல்,புது வருடம் போன்ற பண்டிகை நாட்களில் ஸ்பான்சர் செய்பவர்கள் நிறைய பேர் இருப்பார்கள். நன்கொடைகளும் கிடைக்கும். அதனால் நீங்கள் ஏதேனும் கொடுப்பதையோ அல்லது அந்த இல்லங்களுக்குச் சென்று அவர்களுடன் பொழுதைக் களிப்பதையோ சாதாரண நாட்களில் வைத்துக் கொள்ளுங்கள்

5.அங்கே செல்லும்போது, படாடோபமான உடைகளைத் தவிர்த்து,முடிந்தவரை எளிமையாய்ச் செல்லுங்கள்
6.அங்கு குழந்தைகள் இருப்பின், அவர்களுடன் உங்கள் குழந்தகளை விளையாட அனுமதியுங்கள்

7.நீங்கள் கொடுக்கும் பொருட்களைவிட உங்களது அன்பான சொற்கள் அவர்களுக்கு மிகுந்த மகிழ்வைத் தரும். எனவே அவர்களுடன், சிறிது நேரமாவது செலவிடுங்கள்

8.அங்குள்ளவர்களது சிறு,சிறு தேவைகளைக் கேட்டு அவற்றைப் பூர்த்தி செய்ய முயலுங்கள்

9.ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வேறு வேறு இல்லங்களுக்குச் செல்வதை விட ஒரே இல்லத்திற்கு அடிக்கடி‌ செல்வது ஒரு அந்நியோன்யத்தை அவர்களிடம் உண்டாக்கும்

10.நீங்கள் ஏதேனும் ஸ்பான்சர் செய்யும் நேரங்களில் மட்டும் தான் அங்கு செல்ல வேண்டும் என்பதில்லை. நேரம் கிடைக்கும் போதெல்லாம் அங்கு சென்று அவர்களுக்கு சிறு சிறு உதவிகள் செய்யலாம்.

இவற்றைப் பின்பற்றினால் அவர்களது ஏக்கங்களும் ஒரு முடிவுக்கு வரும்.நமக்கும் உறவுகளின் எண்ணிககை அதிகரித்ததைப் போன்ற ஒரு தெம்பைத் தரும்.

எனக்குத் தோணுணத சொல்லிட்டேன்.ஏதேனும் வழி விட்டுப்போயிருப்பின் பின்னூட்டத்தில் சொல்லுங்க.
பதிவு பயனுள்ளதாக இருந்தால்,தமிழ்மணம்,தமிழிஷ்ல ஓட்டுப் போட்டிடுங்க. நிறைய பேர் படிக்கட்டும்

.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் !!!

இன்று ஜுலை 27 நம்ம ஹாஜர் அப்பா.. எல்லோருடனும் நட்பு பாராட்டும் ஜமால் அண்ணாவுக்குப் பிறந்த நாள்.அவர் வளமும் நலமும் பெற்று வாழ வாழ்த்துவோம்



பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜமால் அண்ணா

.

காமெடி சேனல்களுக்கு ஒரு கேள்வி..

Saturday, July 25, 2009
தொலைக்காட்சி,சினிமா போன்ற ஊடகங்கள் அதிகமாய் என் கவனத்தை எப்போதும் ஈர்ப்பதில்லை.இப்போது இருக்கும் பலப் பல சேனல்களில் அவ்வபோது காமெடி சேனல்கள் மட்டும் பார்ப்பதுண்டு.அப்படிப் பார்த்த ஒரு காமெடி சேனலில் நிகழ்ச்சி இடைவெளிகளில் ஒரு புரோகிராம் போடுகிறார்கள்.
அதில்.. சேனலைச் சேர்ந்த 2,3 பேர் சேர்ந்து, பார்க்,பீச் அல்லது ரோடில் செல்பவர்களை ஏமாற்றும் ஏதோ ஒரு செயலைச் செய்வது.அவர்கள் ஏமாந்து விழிப்பதை பதிவு செய்து ஒலிபரப்புவது.இது எந்த‌ அள‌வுக்கு நாக‌ரீக‌மான செய‌ல் என‌ என‌க்குத் தெரிய‌வில்லை.

அப்படி நான் பார்த்த சிலவும் எனக்குள் தோன்றிய கேள்விகளும்..
1.பேய் முக‌மூடியைப் போட்டுக் கொண்டு ரோடில் செல்லும் ஒருவ‌ர் முன் திடீரென‌ப் போய் குதிப்ப‌து, அவ‌ர் ப‌ய‌ந்து அல‌றுவ‌தை அப்ப‌டியே ஒலிபரப்புவ‌து..
கேள்வி:
ரோடில் போன‌வ‌ர் இத‌ய‌ம் ப‌ல‌வீன‌மாக‌ இருப்ப‌வ‌ராக‌ இருந்தால் என்ன‌ ஆவ‌து?

2.ரோடில் ந‌ட‌ந்துவ‌ருப‌வ‌ரின் எதிர்திசையிலும், பின்தொட‌ர்ந்தும் வ‌ரும் இருவ‌ர்,திடீரென ஒருவ‌ரை நோக்கி ஒருவ‌ர் ஓடி வ‌ந்து க‌ட்டிப் பிடித்து அள‌வ‌ளாவிக் கொள்வ‌து..அந்த‌ ம‌னித‌ர் தம்மை நோக்கி ஓடிவருவதாய் நினைத்து ஒரு நொடி புரியாம‌ல் திகைப்பார்.சில‌ ச‌ம‌ய‌ம் ட‌க்கென‌ ரோடின் ம‌றுப‌க்க‌ம் ஒதுங்குவார்.
கேள்வி:
அப்ப‌டி ரோடின் ப‌க்க‌ம் பயந்து ஓடும்போது அவ‌ருக்கு ஏதேனும் விப‌த்து ஏற்ப‌ட்டால் யார் பொறுப்பு?


3.ரோடில் பெரிய பெட்டி ஒன்றைத் தூக்கமுடியாமல் தூக்கி கொண்டு இருப்பர்.அப்போது வழியில் செல்லும் யாரோ ஒருவரை உதவி செய்ய அழைப்பர்.அவர் வந்து பெட்டியைத் தூக்க உதவ முயல்கையில்,அப்பெட்டியில் மறைந்திருக்கும் ஒருவர்,திடீரென அவர் காலைச் சுரண்டுவார்.
4.ரோடில் போகும் ஒருவர் பர்சைத் தவற விடுவார்.(அறியாமல் போடுவதைப் போல,வேண்டுமென்றே கீழே போடுவார்.) பின்னால் வரும் யாரோ ஒரு அப்பாவி, அதை எடுத்து அவரிடம் கொடுக்க கையில் எடுத்தால், எங்கிருந்தோ வரும் மற்றொருவர்(தொலைக்காட்சியைச் சேர்ந்தவர்) "உங்க பர்சை இவர் எடுத்துகிட்டு ஓடறார்" என்பது போல சீன் கிரியேட் பண்ணி அந்த அப்பாவியை டென்சனாக்கி ஓட ஓட விரட்டுவார்
5.கண் பார்வை இல்லாதவர் போல் நடித்து, ரோடில் போகும் ஒருவரிடம் ரோடை கடந்து போக உதவி கேட்பார் ஒருவர்.அந்த அப்பாவி மனிதர் இவரை ரோடை கடந்து கொண்டுபோய் விடும் நேரத்தில்,எதிர் திசையில் வருபவர்(தொலைக்காட்சியை சேர்ந்தவர்) ஏதோ ஒரு அட்ரஸ்க்கு வழி கேட்பார்.அவர் குனிந்து அட்ரஸைப் படிக்கும் வேளையில், கண் தெரியாதவரின் பாக்கெட்டில் இருந்து பணத்தை இவர் எடுத்து விடுவார். பின்னர் இருவரும் சேர்ந்து,அந்த அப்பாவி மனிதரிடம் பணத்தை குடுங்கள் என கலாட்டா செய்வார்கள்.

கேள்வி(3,4,5): உண்மையிலேயே உதவி தேவைப்படுபவர்களைக் கூட, இவர்கள் நடிக்கிறார்களோ என்ற சந்தேகக் கண் கொண்டு பார்க்க வழி இருக்கிறது அல்லவா?இவற்றால் மனிதனுக்கு மனிதன் சிறு உதவிகள் செய்யும் எண்ணம் தடைப்படாதா?


இவை அனைத்து நகைச்சுவைக்காகத்தான் எடுக்கப்பட்டது என்றாலும், நம் உறவினர்களையோ,நண்பர்களையோ,மதிக்கும் பெரியோரையோ, வெளியில் செல்லும்போது, இப்படி முகம் தெரியாத சிலர் கலாட்டா செய்வதையும், அதை தொலைக்காட்சியில் ஒலிபரப்புவதையும் அனைவராலும் ஏற்றுக் கொள்ளமுடியுமா?

இதைப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு சொல்லிட்டுப் போங்க மக்களே.

.

என்ன‌ருகே நீ இருந்தும்..(6)

Thursday, July 23, 2009
என்ன‌ருகே நீ இருந்தும் 5ம் ப‌குதி

மாலைநேரம்..அவ‌ள் வீட்டில் ஆஜ‌ர்.
ஆண்டி..சூடாக டிப‌ன் செய்து கொண்டிருக்க‌ ஜன‌னி ச‌ம‌ய‌ல‌றை மேடையில் உட்கார்ந்து அதை சுவைத்துக் கொண்டிருந்தாள்.
ஏய்.இன்னும் கெள‌ம்ப‌லியா நீ?
ஓ..காட் ..வ‌ந்திட்டியா?.இதோ ஒரு 5 மினிட்ஸ்
ஆன்ட்டி! போய்ட்டு சீக்கிர‌ம் வ‌ந்துடறோம்..அங்கிள்கிட்ட‌ சொல்லுங்க‌..அவ‌ளைத் திட்ட‌ போறார்..அப்புறம் அந்த வாலு என்னை உண்டு இல்லைன்னு பண்ணிடுவா...
என‌ச் சொல்லிக்கொண்டே டிப‌னைக் காலி பண்ணும் வேலையை நான் தொட‌ர்ந்தேன்..
ச‌ரிப்பா..நான் சொல்லிக்கறேன்..உன்கூட தானே வர்றா..ஏதுவும் சொல்லமாட்டார்..
அதற்குள் கிளம்பி வந்து மலராய் நின்றாள்..
அல்லோ ..என்ன..டாக்டர் சார்..போலாமா?..
அம்மா..பை மா..

ம்..ம்..போலாம்..வா..பை ஆன்ட்டி..

பை..பத்திரமா போய்ட்டுவாங்க கண்ணு..


கார் நகர ஆரம்பித்தது..

போகும் வ‌ழியில்

ஏன் ஜனனி ஒரு மாதிரி சைலன்டா இருக்க‌

இல்ல..இன்னிக்கு எங்க அம்மா ஒரு விஷயம் சொன்னாங்க..அதை யோசிச்சிட்டு இருந்தேன்..

என்ன் விஷயம்? எதைப் பத்தி ?


உங்க‌ளுக்கு அலைய‌ன்ஸ் பாக்க‌ ஆர‌ம்பிச்சி இருக்காங்க‌ இல்ல‌?..அத‌னால அதிக‌மா 2 பேரும் ஒண்ணா சேர்ந்து சுத்தாதீங்க‌..பாக்க‌ற‌வ‌ங்க‌ எல்லாரும் இதை ந‌ல்ல‌ வித‌மா எடுத்துக்க‌ மாட்டாங்க‌..யாராவ‌து ஏதாவ‌து சொல்லிட்டா ரெண்டு குடும்ப‌த்துக்குமே க‌ஷ்ட‌ம்ன்னு சொன்னாங்க‌

ஓ..அப்படியா...

ஆமாம்..அதைக் கேட்டு எனக்கு ரொம்ப கஷ்டமா போச்சி..

இதைச் சொல்வதற்குள் அவள் கண்களில் குளம்..

அப்போ உங்க கல்யாணம் ஆயிட்டா நாம் ரெண்டு பேரும் பழக முடியாதா..வர்ற பொண்ணு நம்மள புரிஞ்சிக்க மாட்டாங்களா? நம்ம பிரண்ஷிப் அவ்ளோதானா..என்னால முடியாதுப்பா.. நம்ம பிரண்ஷிப்பை யாராவது ஏதாவது சொன்னா நான் அவ்ளோதான்..

இதற்கும் கண்களில் இருந்த குளம் கரை மீறியது..அழ ஆரம்பித்திருந்தாள்..

ஏய்..ஏம்மா அழற..அதெல்லாம் பாத்துக்கலாம் விடு..ப்ளீஸ் பேபி ரிலாக்ஸ் யுவ‌ர்செல்ஃப்...

சில‌ நிமிட‌ ச‌மாதான‌த்துக்குப் பின்..
ம்ம்..ஒகே..அழல..கோயிலுக்குப் போலாமா?

என்ன‌ திடீர்ன்னு?

போலாம் ப்ளீஸ்..


ச‌ரி..போலாம்..என‌க்கும் உன்கிட்ட‌ கொஞ்ச‌ம் பேச‌ணும்..

தரிசனத்திற்குப் பின்..பிரகாரத்தில் அவளது ஃபேவரிட் இடத்தில் அமர்ந்தோம்..

என்னவோ..பேசணும்ன்னு சொன்னீங்களேப்பா..சொல்லுங்க..

ம்.ம்..ஏன் திடீர்ன்னு எமோஷனல் ஆயிட்டே ..நீ?

ம்ப்ச்ச்ச்..அதை விடுங்க..யு டெல்..

ஜனனி உன் மனசில நம்ம ஃபிரண்ஸ்ஷிப்பை பத்தி எவ்ளோ பயம் இருக்கோ ..அதைவிட பல மடங்கு பயம் எனக்கும் இருக்குடா.. வர்ற பொண்ணு நம்மல புரிஞ்சிக்கலன்னா..நாம நிரந்திரமா பிரிய வேண்டிய நிலமை கூட வரும்..அதவிட பெரிய கஷ்டம் நம்ம லைஃப்ல வேற ஏதும் இருக்காதுன்னு நினக்கிறேன்..

ம்ம்..அதை நான் இவ்ளோ நாளா யோசிக்கல..இன்னிக்கு அம்மா சொன்னபின்னாடிதான் புரிஞ்சிது..

அதுக்கு எனக்கு ஒரு வழி தோணுது..ஆனா அது எந்த அளவுக்கு சரின்னு எனக்குத் தெரியல..என்ன அது?

பேசாம நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிகிட்டா? நான் இப்படி சொன்ன உடனே,இதே எண்ணத்தோடதான் நான் உன்கிட்ட பழகினேனான்னு நெனக்காதே..இந்த பிரச்சினைக்கு ஒரு சொல்யூஷனாத்தான் இதைச் சொல்றேன்...

இது நிச்சயமா ஒரு சொல்யூஷன் இல்ல ராஜ்.. எனக்கும் இப்படி ஒரு எண்ணம் அம்மா சொன்ன உடனே வந்துது..அப்புறம் தான் யோசிச்சேன்..

அப்படி ஒரு முடிவு எடுத்தா அது நம்ம பேரண்ஸ்க்கு நான் செய்யற நம்பிக்கை துரோகம்..ரெண்டு வீட்லயும் நம்ம மேல இருக்கற நம்பிக்கைல தானே நம்மலபழக விட்டு இருக்காங்க..இப்போ போய் இப்பிடி சொன்னா ...அவங்க நமக்காக ஒத்துக்கலாம்..ஆனாமனசுக்குள்ள எவ்ளோ ஃபீல் பண்ணுவாங்க.. கொஞ்சம் யோசிச்சிப் பாருங்க..
அதுவுமில்லாம உங்க அப்பாக்கு ஜோசியம்னா எவ்ளோ நம்பிக்கைன்னு உங்களுக்கே தெரியும்.. நம்ம 2 பேர் ஜாதகமும் சேராதப்போ ..அவர் இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக்கணும்ன்னா அது அவருக்கு எவ்ளோ கஷ்டம்..

இதெல்லாம் யோசிங்க.. அதுக்கு அப்புறம் நீங்க எண்ண முடிவு எடுத்தாலும் நான் அக்செப்ட் பண்ணிக்கறேன்..கார்ல வெய்ட் பண்றேன்..முடிவு பண்ணிட்டு வாங்க..
சில நிமிடங்களுக்குப் பின் நான் மீண்டும் கடவுள் முன் நின்றேன்..

"கடவுளே! எங்களோட நட்புக்கு பங்கம் வராத மாதிரி வாழ்க்கைத் துணைகளை எங்களுக்குத்தா.."


என வேண்டிக் கொண்டு காரை நோக்கி நடந்தேன்..கோயிலில் விளக்குகள் ஒளிர்ந்தன‌


முற்றும்.

.

விருது வழங்கும் விழா!

Friday, July 17, 2009
வலையுலகில் ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒரு விருது வலம் வந்து கொண்டிருக்கும்.இப்போ சமீபமா எல்லாரும் குடுத்துக்கறது "இன்ட்ரெஸ்டிங் பிளாக் அவார்டு"

எனக்கும் கிடைச்சிருச்சி.. புன்னகை பிளாக்.. J .. மூலமா..


அவருக்கு ரொம்ப நன்றி...நான் இன்ட்ரெஸ்டிங் ஆ எழுதறேன்னு ஒருத்தர் சொன்னதுல கொஞ்சம் பெருமையும் கூட:‍))


இந்த விருத நான் இன்னும் 6 பேருக்குத் தரணுமாமே..ம்ம்ம்..


கார்த்திகைப் பாண்டியன்.. சினிமா விமர்சனங்கள்,கதைகள்ன்னு எல்லாத்தையும் இரசிக்கத்தக்க முறையில எழுதறார்

அன்பு..கதை,கவிதை நிகழ்வுன்னு பின்றார் இவர்.

ச‌க்தி செல்வி... க‌‌விதைப் பூங்காட்டின் ஏக‌போக‌ சொந்த‌க்காரி...

இர‌ச‌னைக்காரி.ராஜியை எப்ப‌டி விடறது?எல்லாத்தையும் ஒரு ர‌ச‌னையோட‌வே எழுதுவாங்க‌

ஜோசப் பால்ராஜ்..ரொம்ப குறைச்சலா எழுதினாலும்,‌சமூக அக்கறையோட ,நல்லா எழுதுவார்

அம்மாக்க‌ளின் வ‌லைப்பூ..குழ‌ந்தைக‌ள் ப‌த்தின்னாவே க‌ண்டிப்பா இன்ட்ர‌ஸ்டிங்கா தான் இருக்கும்..

.அடுத்து.....

ஓ!!!! 6 பேருக்குத்தான் தரணுமா?

என் லிஸ்ட்ல இன்னும் நிறைய பேர் இருக்காங்க..ம்..ம்..என்ன பண்றது..
சரி ..வேற ஏதும் விருது வராமயா போய்டும்..

(மேலே சொன்ன 6 பேரும் இதை உங்க பிளாக்ல போட்டுட்டு..அடுத்த 6 பேருக்கு குடுத்துடு
ங்க‌)
.

நாங்க‌ள் ம‌னித‌ர்க‌ள்

ம‌ன்னியுங்க‌ள் ம‌ல‌ர்க‌ளே..
நாங்க‌ள் ம‌னித‌ர்க‌ள்
தொலைந்து போன‌ இள‌மைக்காய் ஏங்கி விட்டு
ப‌ச்சிள‌ம் பாலகர்களை ப‌ள்ளியில் சேர்ப்போம்
கல்வி கற்பிப்பதை சேவையில் சேர்த்து விட்டு
கட்டணத்தின் பெயரால் கோடிகளை குவிப்போம்

ம‌ன்னியுங்க‌ள் ம‌ல‌ர்க‌ளே..
நாங்க‌ள் ம‌னித‌ர்க‌ள்
வ‌ரதட்சணை வாங்குதல் ஈனச் செயல் எனப் பேசி
சீர் என்னும் பெயரால் செழிப்போம்
ஆணுக்குப் பெண் ச‌ம‌மென‌ப் பேசிவிட்டு
வீட்டுப் பெண்க‌ளுக்கு வாய்ப் பூட்டு போடுவோம்

ம‌ன்னியுங்க‌ள் ம‌ல‌ர்க‌ளே..
நாங்க‌ள் ம‌னித‌ர்க‌ள்
தெய்வீகத்தனமானது என‌க் கூறி விட்டு
காத‌லிலும் க‌ய‌மைத்த‌ன‌ம் புரிவோம்
சாதியை ஒழிக்க‌ணும் என‌ முழ‌ங்கி விட்டு
சாக்காட்டிலும் சாதிச் சுடுகாடு கேட்போம்
ம‌ன்னியுங்க‌ள் ம‌ல‌ர்க‌ளே..
நாங்க‌ள் ம‌னித‌ர்க‌ள்

.

வாழ்த்துக்கள் அன்புடன் அருணா மேடம்:-)

Thursday, July 16, 2009
"முதன் முதலாய்" இந்த வார்த்தையை நினைக்கும்போதே மனதுக்குள் ஒரு உற்சாகம் கண்டிப்பாய் கொப்புளிக்கும். நம் வாழ்க்கையில் "முதல் நிமிடம்" என்பது எப்போதுமே ஸ்பெஷல் தான்.இந்த முதல் நிமிடம் என்பதோடு தொடர்புடையது உயர்வு(பிரமோஷன்)..நம் தற்போதைய நிலையிலிருந்து கிடைக்கும் உயர்வு எப்போதும் ஸ்பெஷல்.பர்ஸனல் வாழ்க்கைல வர்ற அக்கா,அண்ணா, அப்பா,அம்மா, தாத்தா,பாட்டி பிரமொஷனா இருந்தாலும் சரி...ஆபிஸ்ல வர்ற பதவி உயர்வா இருந்தாலும் சரி..அது கண்டிப்பா ஒரு பரவச நிமிடத்தை தரும்.
அப்படிப்பட்ட ஒரு பரவச நிமிடம் நம்ம அன்புடன் அருணா மேடம்க்கு கிடைச்சிருக்கு.அவங்க ஒரு பள்ளியின் பிரின்சிபலா பதவி உயர்வை அடைஞ்சு இருக்காங்க.


அவங்களோட சிறந்த நிர்வாகத்திறமைக்கும்,மாணவர்கள்பால் கொண்ட அக்கறைக்கும் இது ஒரு சிறந்த பரிசு.அவங்களோட நிர்வாகத்தில் பள்ளி பல சிறப்புகளை எட்டும் என்பதில் ஐயமில்லை.
எல்லாருக்கும் பூங்கொத்து தர்ற அவங்களுக்கே ஒரு பூங்கொத்து.:‍)


வாழ்த்துக்கள் அன்புடன் அருணா மேடம்.

மக்களே!!!!
நான் வாழ்த்திட்டேன்..நீங்களும் வாழ்த்துங்கன்னு சொல்லணுமா என்ன?



.

என் 50வது பதிவு :-அப்பாவுக்கு

Wednesday, July 15, 2009



இது என் 50வது பதிவு.

இதை அப்பாவுக்கு அர்ப்பணிக்கும் எண்ணத்தில் நிறைய எழுத இருந்தேன்.நேரச்சிக்கலின் காரணமாய், என் அப்பாவுக்கான பிறந்த நாள் வாழ்த்துக்களை மட்டும் தெரிவித்துக் கொள்கிறேன்
(நேரச்சிக்கல் என்பது ஒரு பொய்யான காரணம் தான் அப்பா.. நீங்கள் எனக்கு செய்தவற்றையும்,செய்து கொண்டிருப்பவற்றையும் சரியான வடிவில் எழுதி வெளிப்படுத்த முடியுமா என்னும் பயம் தான் இதற்கு காரணம்.)

அப்பா..பிறந்த நாள் வாழ்த்துக்கள். நீங்கள் வளத்தோடும், நலத்தோடும் பல்லாண்டு வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.



ஜோச‌ப் பால்ராஜ்க்கு ஒரு ப‌கிர‌ங்க‌ எச்ச‌ரிக்கை

Saturday, July 11, 2009
எல்லாரும் வாங்க‌. வ‌ண‌க்க‌ம்.ஒருத்த‌ர்க்கு எச்ச்ர்க்கை விட‌றதுக்கு முன்னாடி அவ‌ர் ப‌த்தி உங்க‌ளுக்கு எல்லாம் சோல்லிட‌னுமில்லீங்க‌..ஜோச‌ப் பால்ராஜ் ப‌த்தி மொத‌ல்ல‌ கொஞ்ச‌ம் சொல்லிட‌றேங்க‌.

அவ‌ர் ந‌ல்ல‌வ்ர்,வ‌ல்ல‌வ‌ர், நாலும் தெரிஞ்ச‌வ‌ர்,தின‌ம் 2 ப‌திவாவ‌து போட்டுடுவார்.பாக்க‌ற‌ அத்த‌னை வ‌லைப்பூவுக்கும் ஃபாலோய‌ர் ஆகிடுவார்.சிங்கை ப‌திவ‌ர் ச‌ங்க‌த்தின் தூண்.பிளாக்கின் டெக்னிக‌ல் விஷ‌ய‌ங்க‌ள்ல‌ ச‌ந்தேக‌ம் ஏதும் கேட்டா உட‌னே தீர்த்து வ‌ச்சிடுவார்.அப்புறம்...

(ஸ்ஸ்ஸ்ஸ்ப்பாஆ..போதும்.. நிறுத்து இய‌ற்கை..வ‌ங்கின‌ காசுக்கு கொஞ்ச‌ம் ஓவ‌ராதான் கூவுறே!!)


ச‌ரி..இவ்ளோ ந‌ல்ல‌வ‌ர்ன்னு சொல்லிட்டு ஏன் எச்ச‌ரிக்க‌றேன்னு கேக்க‌றீங்க‌ளா..
வேற ஒண்ணுமில்லீங்க‌..அவ‌ர்க்கு JULY 11 பிறந்த‌ நாள்.அவ‌ருக்கு கேக் ரெடி..


கேக்கை ந‌ண்ப‌ர்க‌ள் அவ‌ர் முக‌த்தில் பூச‌லாம்.
.ட்ரீட்ங்கிற பேர்ல‌ அவ‌ர் ப‌ர்ஸ் காலி ஆக‌லாம்.
ந‌ண்ப‌ர்க‌ளிட‌ம் இருந்து birthday punches கிடைக்க‌லாம்
அத‌னால‌ எச்ச‌ரிக்கையா இருங்க‌ன்னு சொல்ற‌து ஒரு தோழியோட‌ க‌ட‌மை இல்லீங்க‌ளா.. அத‌னால‌ தான் அப்ப‌டி சொன்னேங்க‌.
ச‌ரி வாங்க ..அவ‌ர் கேக் வெட்ட சொல்லி வாழ்த்த‌லாம்... நீங்க‌ கேக்கை வெட்டுங்க‌ ஜோச‌ப்..



ஹ‌லோ..ஹ‌லோ.. ஜோச‌ப் பால்ராஜ்.!!!!!... கேக்கை வெட்டுங்க‌ ன்னு சொன்னது க‌த்தில‌ வெட்ட‌ற‌தை.....‌ இப்பிடி சாப்டு காலி ப‌ண்றதை இல்ல‌.. உங்க‌ளையெல்லாம்.@$#$$%^%(*&%^%&.ச‌ரி..ச‌ரி..ப‌ர்த்டே பேபியை ஒண்ணும் குறை சொல்ல‌ கூடாது.



இனிய‌ பிறந்த‌ நாள் வாழ்த்துக்க‌ள்..ஜோச‌ப் பென‌டிக்ட் பால்ராஜ்....ப‌தினாறும் பெற்று பெருவாழ்வு வாழ (வாழ்த்துகிறேன்) வாழ்த்த‌ வ‌ய‌தில்லை வ‌ண‌ங்குகிறேன்:‍))))))))))))

VaanamVanthu.mp3

.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Tuesday, July 7, 2009


இன்று என் பிறந்த‌ நாளுக்கு வாழ்த்திய‌ அனைவ‌ருக்கும் என் ம‌ன‌ம் நிறைந்த‌ ந‌ன்றின்னு சொல்ல‌ ஆசைதான்.(ஆனால் ந‌ன்றி சொல்லி உங்க‌ள எல்லாம் அந்நிய‌ப்ப‌டுத்த‌ன்னுமான்னு யோசிக்க‌றேன்)

நிச்ச‌ய‌மாய் இப்பிறந்த‌ நாளை என் வாழ்வில் ம‌ற‌க்க‌ முடியாத‌ இனிய‌ நாளாக்கிவிட்டீர்க‌ள்.
ம‌கிழ்ந்திருக்கின்றேன். நெகிழ்ந்திருக்கின்றேன்

ப‌திவு போட்டு வாழ்த்திய‌

ச‌க்தி அக்கா

ஆயில்ய‌ன்

ச‌ஞ்ச‌ய் காந்தி

அன்பு

அபி அப்பா

தூயா

இவ‌ங்க‌ளுக்கும்,
விட்ஜெட்ல் வாழ்த்திய‌

வ‌ச‌ந்த‌ குமார்

மற்றும் பதிவின் பின்னூட்ட‌ம்,ஜிமெயில்,ஆர்குட்,ஃபேஸ்புக் என‌ வாழ்த்திய‌ அனைவ‌ருக்கும்,ஏன் முன்னாடியே சொல்ல‌லைன்னு உரிமையா கோச்சிகிட்ட‌வ‌ங்க‌ளுக்கும் ஒரே ஒரு கேள்வி..

என்ன‌ த‌வ‌ம் செய்தேன் நான் இத்த‌கைய‌ உங்க‌ள் அன்பைப் பெற

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் !!!!

Monday, July 6, 2009

இன்னிக்கு வ‌லையுல‌க‌ ம‌க்க‌ள் 2 பேருக்கு பிற‌ந்த‌ நாள்.
ஒருத்த‌ர்.....
ச‌க்தி (அக்கா)...வீட்டுப் புறாங்கிற க‌விதை தோட்ட‌த்தின் ஏக‌போக‌ சொந்த‌க்கார‌ங்க‌‌

வீட்டுப்புறாங்கிற வ‌லைப்பூவை நீங்க‌ ப‌டிச்சிருக்கீங்களா? ப‌டிக்க‌லைனா கீழே கிளிக் ப‌ண்ணி ப‌டிச்சி பாருங்க‌..

வீட்டுப்புறா

க‌விதைக‌ளின் ச‌ங்க‌ம‌ன்.பின்னூட்ட‌ங்க‌ளின் புக‌லிட‌ம். க‌விதைங்கிற‌ பேர்ல‌ 4.5 வ‌ரி எழுத‌ற‌த்துக்குள்ளயே என‌க்கெல்லாம் பைத்திய‌மே புடிச்சிடுது..வ‌லையுல‌க‌ விட்டே ஓடிட‌லாமான்னு யோசிக்க‌ ஆர‌ம்பிச்சிட‌றேன்.ஆனா இவங்க‌ க‌விதையா பொள‌ந்து க‌ட்ட‌றாங்க‌.

அதே மாதிரி இவ‌ங்க‌ளுக்கு வ‌ர்ற‌ பின்னூட்ட்ங்க‌ள‌ எண்ணிப் பார்த்து என் பிளாக்ல‌ பின்னூட்ட‌ப் பெட்டியையே மூடிட‌லாமான்னு பாக்க‌றேன்... ( நான் பின்னூட்ட‌ங்க‌ளை அனும‌திக்க‌ற‌தில்லைன்னு ச‌மாளிக்க‌ல்லாம் பாருங்க‌..அதுக்கு தான்)

எப்ப‌டி இவ்ளோ திற‌மை இவ‌ங்க‌ளுக்கு ம‌ட்டும்ன்னு தெரிஞ்சிக்க‌லாம்ன்னு ..அக்கா.. நீங்க‌ எந்த நேர‌த்தில‌ பொற‌ந்தீங்க‌ன்னு‌ கேட்ட‌ப்ப‌தான் தெரிஞ்சிது..அக்காக்கு இன்னிக்கு பிற‌ந்த‌ நாள் .ன்னு..

அத‌னால‌ ம‌க்க‌ளே எல்லாரும் சக்திக்கு ஜோரா ஒரு ஹேப்பி ப‌ர்த் டே பாட்டு பாடிட்டு போங்க‌...

இன்னொருத்த‌ர்.. தூயா..

அவ‌ங்க‌ள‌ப் ப‌த்தி நான் ஏதும் சொல்ல‌ப்போனா த‌மிழ் வ‌லையுல‌க‌மே திர‌ண்டு என்கிட்ட‌ ச‌ண்டைக்கு வ‌ந்திடும்.. எங்க‌ பொண்ணைப் ப‌த்தி எங்க‌ளுக்கே அறிமுக‌மான்னு...ஏன்னா அவ‌ங்க‌ வ‌லையுலகில் பெரும்பாலானோரின் செல்ல‌ம் அவ‌ங்க‌.

அத‌னால‌ அவ‌ங்க‌ளுக்கு வாழ்த்து ம‌ட்டும் சொல்லிக்க‌றேன்



Vaa Vaa En Dhevada...

செல்ல‌ம்..ஹேப்பி ப‌ர்த்டே டு யூ

Friday, July 3, 2009
வ‌லையுல‌க‌ க‌விதைத் தென்ற‌ல்,க‌விதைப் புய‌ல்,க‌விதை சூறாவ‌ளியும் என‌து பாச‌மிகு அக்காவுமான‌ வீட்டுப்புறா- ச‌க்தியின் மூத்த‌ இராஜ‌குமார‌ன் பாலாஜிக்கு இன்று பிற‌ந்த‌ நாள்.அவ‌ன் எல்லாவ‌ள‌மும் பெற்று வாழ வாழ்த்துவோம்.


செல்லம்..கேக் வச்சிட்டு ரெடியா இருக்கேன்..சீக்கிர‌ம் வ‌ந்து க‌ட் ப‌ண்ணு ....ஓடிவா

ச‌க்தி அக்கா இந்த‌ சாக்லேட்ஸ் எல்லாம் ப‌த்திர‌மா குட்டி பைய‌ன் கிட்ட‌ சேத்துடுங்க‌





.

ம‌ல‌ரே...த‌மிழ்ம‌ல‌ரே!

Thursday, July 2, 2009
நான் சில‌ மாத‌ங்க‌ளுக்கு முன் எழுதிய‌ "31622401 ம் நொடியில் உல‌க‌ம்?" என்னும் ப‌திவு "லீப் நொடி 2008ன் சிற‌ப்பு" என்னும் த‌லைப்பில் த‌மிழ்ம‌ல‌ரில் வ‌ந்துள்ளது.

இணைய‌த்தில் ஏதோ கிறுக்கிக்கொண்டிருக்கும் எனக்கு உண்மையிலேயே ரொம்ப‌ ச‌ந்தோஷ‌ம்.

த‌மிழ்ம‌ல‌ருக்கு ந‌ன்றி

இந்த‌ செய்தியை சொன்ன‌ திரு.ஜோச‌ப் பால்ராஜ்க்கு ந‌ன்றி.. ந‌ன்றி.. ந‌ன்றி

மேலும் சில‌ர‌து ப‌திவுக‌ளும் அதே ப‌க்க‌த்தில் வெளியாகியுள்ள‌து.

அவை

பெண்கள் வெட்கப்படுவது எப்போது? by ச‌ஞ்ச‌ய் காந்தி

இல‌வ‌ச‌ இணைய‌த‌ள‌ பெய‌ர் ப‌திவு by SUMAZLA/சுமஜ்லா

உண்மையான‌ ஊன்றுகோல் by நாம‌க்க‌ல் சிபி

இரவில் ரசித்து,பகலில் வரைந்தது by CHE


நர்சரி வார்த்தைகள் by செல்வராஜ் ஜெகதீசன்

‌பாம்புக்க‌டி -ப‌த‌ட்ட‌ம் வேண்டாம் by Dr.த‌.ஜீவ‌ராஜ்

லீப் நொடி 2008ன் சிற‌ப்பு-இய‌ற்கை ம‌க‌ள்

த‌மிழ்ம‌ல‌ரைப் ப‌ற்றிய‌ மேல் விவ‌ர‌ங்க‌ளுக்கு இங்கே கிளிக்க‌வும்- த‌மிழ்ம‌ல‌ர்

அனைவ‌ருக்கும் வாழ்த்துக்க‌ள்

.