வாழ்த்துக்கள் அன்புச் சகோதரி:-)

Thursday, April 29, 2010



அன்புத் தோழி,பேருக்கேத்த வாலி,தருமபுரியின் இளவரசி,அயல் நாட்டு மஹாராணி, என் செல்ல அக்கா கபீஷ் தீபாக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.




என் அக்கா இன்றுபோலே என்றென்றும் மாமாவை மிரட்டிக் கொண்டு வாழ வாழ்த்துக்கள்

.

மனதில் மலர்ந்தவை 18/04/10

Sunday, April 18, 2010
பொஸஸிவ்னஸ் என்பது உறவிகளுக்கிடையேயான மிகக் கடும் பிரச்சினை. இந்த மாதிரி பொசஸிவ்னஸில் புலம்பும் எத்தனையோ பேரை லெபட் அன்ட் ரைட் வாங்கி இருக்கேன்.நான் எப்போவுமே என் நட்புகளிடம் பொஸஸிவ்னஸ் கொள்வதில்லை அப்படின்னு ஒரு நெனப்புலயே சுத்திட்டு இருந்தேன்.ஆனால் அண்மையில் வெளியூரில் வேலை செய்யும் தோழி ஒருத்தி ஊருக்கு வருவதை என்னிடம் சொல்லாமல் வேறொருவர் சொன்னது,அவர் மூலமாகத் தெரியவந்தபின் அவளை நான் திட்டிய திட்டு ,அம்மாடி.. எனக்கே கொஞ்சம் பாவமாய்த்தான் இருக்கு.அதுக்கு அவள் கேட்டாள்."ஏய் இப்ப உனக்கு என்ன பிரச்சினை. நான் உன்கிட்ட சொல்லாம வந்ததா இல்ல அவர்கிட்ட சொன்னதா" என்று. சர்வ நிச்சயமாய் பதில் தெரியவில்லை.....என்னிடமும் பொஸஸிவ்னஸ் எட்டிப்பாக்குதோ

**********************************************************************************
என் தோழி ஒருத்தி தவறாமல் குறுந்தகவலோ, மெயிலோ தினமும் தவறாமல் அனுப்புவாள்.திடீரென கொஞ்ச நாள் நிறுத்திவிடுவாள்.மீண்டும் கொஞ்ச நாளில் மீண்டும் தொடங்குவாள்.ஏன் எனக் காரணம் கேட்டப்போது சொன்னாள். நான் அனுப்பாதப்போ ஏன் அனுப்பலைன்னு கேக்கறவங்களும்,அவங்களே அனுப்பறவங்களும் தான் நம் மெசேஜ்களை விரும்பறாங்கன்னு அர்த்தம்.மத்தவங்களுக்கு நம் மெசேஜ் ஒரு சுமைதான்.சில நேரங்களில் நம் நட்பும் கூட அதனால் Try to keep away from them என்கிறாள்.நிஜமா மக்காஸ்.அப்போ மெசேஜ் அனுப்பறதுலதான் நட்பு இருக்கா?

*********************************************************************************

அண்மையில் டெக்னிகல் மேட்டர் அதிகமாக இல்லாத ஒரு தேர்வுத்தாளைத் திருத்தும் சந்தர்ப்பம் அமைந்தது.அதில் தெரிந்த்து மாணவர்களுக்கு செல்போன்களால் விளையும் மிக முக்கிய தீமை.பதில்களில் பலப்பல ஸ்பெல்லிங் மிஸ்டேக்குகள்.பல இடங்களில் sms language.உடனே off செய்துவிட்டேன்.என் மொபைலில் dictionary mode.இப்படியே போனால் ஆங்கிலமும் அரைகுறை ஆகிவிடும் போல இருக்குதே

**********************************************************************************
நம் நாட்டில் நம் ஊரில் வாழ்வதில் பெருமைப்படும் தருணங்கள் பல நேரங்களில் நிகழும்.அப்படிப்பட்ட ஒரு தருணம் அண்மையில் வந்தது. இந்தக் கோடியில் இருவரைப் பற்றி அறிந்ததும். நானும் ஏதேனும் செய்ய வேண்டும் என்னும் உத்வேகத்தை விதைத்தோர்க்கு நன்றியும்,வணக்கங்களும்


******************************************************************************.

எனக்கு பிடித்த 10 பெண்கள் தொடர் பதிவு

Friday, April 2, 2010
எனக்குப் பிடித்த பெண்கள் பத்து பேரைப் பத்தி எழுதச் சொல்லி T.V.ராதாகிருஷ்ணன் ஐயா கூப்ட்டு ரொம்ப நாளாயிடுச்சிங்க.அழைப்பிற்கு நன்றி ஐயா. தாம‌தத்திற்கு ம‌ன்னிக்க‌வும்.


இத்தொடர்பதிவிற்கான நிபந்தனைகள்
1.உங்களின் சொந்தக்காரராய் இருக்கக் கூடாது
2.வரிசை முக்கியமில்லை
3.ஒரே துறையில் பலர் பிடித்தமானவராய் இருக்கும்.இப்பதிவு வெவ்வேறு துறையில் இருப்பவராய் இருக்க வேண்டும்

பிடித்தவர்களைப் பற்றி நினைக்கையில் முதல் முதலில் கண்முன் நிற்பது தோழமைச் சொந்தங்கள்.அவர்களைப் பற்றி இப்பதிவில் எழுதக் கூடாதென்பது விதியாகையால், அதை தாண்டி யோசிக்கும் போது வரிசை கட்டி மனதை நிரப்புகிறார்கள் கீழுள்ளவர்கள். உலகறிந்த சாதனைப் பெண்களாய் இவர்கள் இல்லாவிட்டலும்,என் ம‌ன‌தைக் கொள்ளை கொண்ட‌வ‌ர்க‌ள் இவ‌ர்க‌ள்.

1.நான் ஆரம்பக் கல்வி பயில்கையில், என் பள்ளியின் அருகில் கடை வைத்திருந்த பாட்டி. அவரின் பெயர் சிவகாமி என நினைக்கிறேன்.எங்கள் பள்ளியில் பலருக்கும் பகிர்ந்துண்ணுதலை கற்றுக் கொடுத்த‌வர் அவர்தான். நாங்கள் ஏதேனும் தின்பண்டம் வாங்கும் போது, அருகில் ஒரு எழைக் குழந்தை இருந்தால் அந்தப் பாப்பாவுக்கும் கொஞ்சம் குடுக்கலாம் நீதான் நிறைய வச்சிருக்கியே அப்படின்னு சொல்லி பகிர்ந்தளிப்பார்கள்.அந்த வயதில் அவரைச் சுத்தமாய்ப் பிடிக்காது. நாம வாங்குற மிட்டாயில யாருக்கோ பங்கு தரச் சொல்றாங்களேன்னு.. ஆனால் இப்போது புரிகிறது அவரின் மனசு

2.என் கல்லூரிக் காலத்தில், எங்க‌ள் க‌ல்லூரிப் பேருந்தின் ஒரு திருப்ப‌த்தில் தினமும் டாடா காண்பித்து உற்சாகத்தை விதைத்த ஐந்து வயது மதிக்கத்தகுந்த ஒரு குட்டிப் பாப்பா

3.வ‌ய‌தான கால‌த்திலும், ம‌ங்க‌ள‌க‌ர‌மான தோற்றத்துடன் அதிகாலை நேரத்திலேயே வாச‌லுக்கு நீர் தெளிக்கும் எங்க‌ள் எதிர் வீட்டு ப‌ணிப்பெண் சரஸ்வதியம்மா.மனதில் விருப்பம் இருப்பின் வயது ஒரு தடையல்ல என்பதை உணர்த்துபவர் இவர்

4.எங்கள் கல்லூரி டிரஸ்ட் உறுப்பினர் திருமதி.அமுதா.அவரின் உடை உடுத்தும் நேர்த்திக்கு நான் அடிமை என்றே சொல்லாம்

5.தனியொரு மனுசியாய்,உறவுகளின் துணையும் பெரிதாக இல்லாத நிலையிலும் தன் மூன்று பெண்களையும் நன்றாகப் படிக்க வைத்து திருமணமும் செய்து வைத்த என் பெரியம்மாவின் தோழி கனகம் அத்தை.அவரின் தன்னம்பிக்கை மகத்தானது

6.மிகச் சிறிய தையல் கடை ஒன்றை ஆரம்பித்து, ஐந்தாறு ஆண்டுகளில் அதைத் தையல் பள்ளியாகவும், நகரின் குறிப்பிடத்தகுந்த ரெடிமேட் ஆடை தயாரிப்பு நிறுவனமாகவும் உயர்த்திய என் அக்காவின் சீனியர் கீதா அக்கா. உழைப்புக்கு உதாரணமாய் எனக்குத் தோன்றுபவர் அவர்.

7.எத்தனையோ போராட்டங்களைச் சந்தித்தாலும்,அயராமல் தான் நினைத்தவரையே கைப்பிடித்த என் கல்லூரி மாணவி சுகன்யா.அவரின் செயல்கள் சிலவற்றில் எனக்கு மாற்றுக் கருத்து இருந்தாலும் எடுத்ததை முடிக்கும் அவரின் திண்மையை வியக்கிறேன்

8.எங்கள் வீட்டருகில் இருக்கும் மைதானத்தில் தினமும் ஓட்டப் பயிற்சி எடுக்கும் மாணவி கீர்த்தனா.எப்படியும் தேசிய அளவில் வெற்றி பெற வேண்டும் என்னும் அவளது ஆசையும் அதற்கான கடும் உழைப்பும் ஈர்க்கின்றன என்னை

9.பெண் என்றால் மென்மை என்பதற்கு உதாரணமாய், வண்டிக்காரனிடம் அடி வாங்கும் மாட்டிற்கும் கண்ணீர் சிந்தும் என் கல்லூரித் தோழியின் தாய் லஷ்மி அம்மா

10.சில நாட்களுக்கு முன் மருத்துவமனை சென்ற போது முதன் முதலில் நான் பார்த்த அப்போதுதான் பிறந்த பச்சிளம் பெண் குழந்தை.


பட்டியலில் பத்துபேருக்கு மட்டுமே அனுமதி என்பதால் இதோடு நிறுத்திக் கொள்கிறேன்.
இது வரை இத்தொடர் பதிவை எழுதியவர் யார் யார் என்பது சரியாகத் தெரியாததால் நான் யாரையும் அழைக்கவில்லை

.