இதயப்பூக்கள் மலர்ந்தனவே

Monday, October 26, 2009
வரலாறு கூறும் தொடர்ப்பதிவுக்கு அழைத்தவர் ஆதவன். நான் போட முடிவு செய்திருந்த நன்றிப் பதிவையும் இதனுடன் கலந்துகட்டி எழுதிட்டேன்.படிச்சிகோங்க மக்களே


புராஜ‌க்ட் ரிப்போர்ட்டும்,ரெகார்ட் நோட் புக்கும் அப்போ அப்போ கொஞ்ச‌ம் கிளாஸ் நோட்ஸ் ம்ன்னு எழுத்துன்னா அது இங்கிலீஷ்... இண்ட‌ர்நெட்ன்னா அது என் துறை சார்ந்த‌ ட‌வுன்லோடுக்கும்,மெயில்பார்க்கவும் மட்டும்தான் என்று இருந்த‌ என‌க்கு இப்ப‌டி ஒரு வ‌லையுல‌க‌ம் இருக்கிறது,அது மற்றுமொரு தமிழ் உலகின் வாயிலைத் திறக்கிறது என்ப‌தை அறிமுக‌ம் செய்த‌து ஏதோ ஒரு கூகுல் ச‌ர்ச் ல் திற‌ந்த விவசாய சம்பந்தமான ஒரு பதிவு.அந்த‌ வ‌லைப்பூவை ஓர‌ள‌வு மேய்ந்த‌பின்ன‌ர், நாமும் ஆர‌மிப்பிக்க‌லாமே என ஆசைப்பட்டு ஆனால் எப்ப‌டி என‌த் தெரியாம‌ல் த‌ட்டித் த‌ட‌வி ஆர‌ம்பித்த‌துதான் இத‌ய‌ப்பூக்க‌ளும்,இந்த‌ இய‌ற்கை ம‌க‌ள் என்னும் பெய‌ரும்.
டைரியில் இருந்த‌வ‌ற்றுக்கு ஒரு பேக் அப் காபியாக‌ இருந்த வ‌லைப்பூ என் நெஞ்ச‌த்தில் நிறைந்து,இதில் எழுத, அப்போ அப்போ தோணுவ‌தையெல்லாம் குறிப்பெடுக்க‌வே ஒரு டைரியை சும‌ப்ப‌வ‌ளாக‌ என்னை மாற்றிய‌து எப்போது என‌த் தெரிய‌வில்லை.
அப்படி நான் தத்துபித்துன்னு எழுதிட்டு இருந்த காலத்தில் என் வலைப்பூவை வலைச்சரத்தில் அறிமுகம் செய்தார் மருத்துவர்.தேவ‌ன்மாய‌ம்.என் வலையுலக எழுத்துக்குக் கிடைத்த‌ முத‌ல் அங்கீகார‌ம் அது.

பின்ன‌ர் பின்னூட்ட‌ம் போடுவ‌து முத‌ல்,அடுத்த‌வ‌ர் வ‌லைப்பூவைத் தொட‌ர்வ‌து வ‌ரை ஒவ்வொன்றாய்க் க‌ற்றுக் கொண்டேன்.

யூத்புல் விக‌ட‌ன்னு ஒண்ணு இருக்குங்கிற‌தே தெரியாத நேர‌‌த்தில்,உங்க பதிவு யூத்புல் விகடனில் வந்திருக்குன்னு ஜமால் அண்ணா சொன்னார்.அதென்ன யூத்புல் விகடன்னு தேடினப்போ கூகுளார் வழிகாட்டிக் கூட்டிப்போனார்.
அப்புற‌ம் என்ன‌? நானும் ரவுடி ஆயிட்டேன் இல்ல. .இப்போதைக்கு ஏற‌த் தாழ‌ 20 ப‌திவுக‌ள் யூத்புல் விக‌ட‌ன்ல‌ வ‌ந்திருச்சி.

ச‌ரி.. போதும் இந்த‌ வ‌லைப்பூ ப‌ய‌ண‌ம்ன்னு முடிவெடுத்த‌ நேர‌த்தில், தொட‌ர்ப‌திவுக‌ளுக்கு ந‌ட்புக‌ள் அழைக்க‌ ஆர‌ம்பித்த‌ன‌ர்.அதே நேர‌த்தில் விருதுக‌ளும் வ‌ர‌ ஆர‌ம்பித்த‌ன‌.விருதுக‌ளை அளித்த‌ Dr.தேவ‌ன்மாய‌ம்,தார‌ணிபிரியா,ராஜ்குமார்,விக்னேஷ்வ‌ரி,ப‌துமை,J,மேன‌காச‌த்யா தொட‌ர்ப‌திவுக்கு அழைத்த‌ ஆத‌வ‌ன்,மேனகாச‌த்யா,அன்பு,ம‌கா,Dr.தேவ‌ன்மாய‌ம் அனைவ‌ருக்கும் என‌து ம‌ன‌ம்க‌னிந்த‌ ந‌ன்றி.

அதே நேர‌த்தில் எனது இவ்வ‌ருட‌ப் பிற‌ந்த‌ நாளை நிச்ச‌ய‌மாய் சிற‌ப்பான‌தாக்கிய வீட்டுபுறா ச‌க்தி,ஆயில்யன்,ச‌ஞ்ச‌ய் காந்தி,அன்பு,அபி அப்பா,தூயா,வ‌ச‌ந்த‌ குமார் ஆகியோரது பதிவுகளுக்கும்,மற்றும் அனைவரது வாழ்த்துக்களுக்கும் மிக்க‌ நன்றி

ஒருநாள் மெயிலைத் திற‌ந்தால், த‌மிழ்ம‌ல‌ர் ப‌த்திரிக்கையின் பிர‌தி நண்ப‌ரிட‌மிருந்து வ‌ந்திருந்த‌து. இதையெதுக்கு அனுப்பினீங்க‌ன்னு கேட்டா,4ம் ப‌க்க‌ம் பாருங்க‌ அப்ப‌டின்னு சொன்னார்.போய்ப் பார்த்தா என்னோட‌ ஒரு ப‌திவு அங்கே.என் வ‌லைப்பூ முகவ‌ரியுட‌ன்.

இது போதாதா என் எழுத்துப் ப‌ய‌ண‌த்தை ரீஸ்டார்ட் ப‌ண்ண‌? ம்ம்..மீண்டும் முழுவேக‌த்தில் தொட‌ங்கிய‌து.

இப்படி வலைப்பூ வ‌ண்டி மிக‌ வேக‌த்தில் போக‌ ஆர‌ம்பித்த‌ நேர‌த்தில்,வ‌ந்த‌து சில‌ த‌னிப்ப‌ட்ட மற்றும் உய‌ர்க‌ல்வி சார்ந்த‌ வேலைக‌ள்.

ச‌ரி. இனி வ‌லைப்பூ வ‌ண்டியை நிறுத்தி விட்டு க‌ல்வி வ‌ண்டிக்கு மாற‌ணும் அப்ப‌டின்னு முடிவு ப‌ண்ண‌ நேர‌த்தில் வ‌ந்த‌து வ‌லைச்ச‌ர‌ அழைப்ப.(நன்றி சீனா ஐயா மற்றும் சுரேஷ் குமார்) .என் வ‌லைப்பூவைப் பின்தொட‌ர்ப‌வ‌ர்க‌ள் எண்ணிக்கையும் 100ஐ நெருங்கிய‌து.100பின்தொட‌ர்ப‌வ‌ர்க‌ள் எப்போ வ‌ருவாங்க‌ன்னு ந‌க‌த்தை க‌டிச்சிட்டு காத்திருந்த‌ நேர‌த்தில் வ‌லைச்ச‌ர‌ வார‌ம் ஆரம்பித்த‌து.சீனா ஐயா 100வ‌து பின் தொட‌ர்ப‌வ‌ராக‌ இணைந்தார்.அது ஒரு வார‌த்தில் 106ஆக‌ உய‌ர்ந்தது.அதே சமயத்தில் வ‌லைச்ச‌ர வார‌மும் இனிதே நிறைவுற்றது.இவ்வலையுல‌கால் கிடைத்த நட்புக்கள் ஏராளம்.அனைத்து நட்புக்களுக்கும் என் நன்றி.ஏதேனும் சொல்லாலோ,செயலாலோ நான் என்னை அறியாமல் யாரையும் புண்படுத்தி இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்.

தனிப்பட்ட‌ வேலைகள் என்னையே மூழ்கடிக்கும் நிலைக்கு அதிகரித்து விட்டதால் வலைப்பூவுக்கு விடுமுறை விடும் முடிவை இப்போது எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.இன்றுமுதல் இந்த வலைப்பூவுக்கு விடுமுறை விட்டுக்கறேன் மக்களே. மீண்டும் வரவேண்டிய நேரத்தில் கரெக்டா வருவேன்.

அனைவ‌ருக்கும் மிக்க நன்றி‌.

.

அட்டெண் டன்டன்டன்டன் ஸ்

Thursday, October 22, 2009
வணக்கம் மக்கள்ஸ். நான் இங்கே டெபுடேஷன்ல போயி நாலு நாள் ஆகிப்போச்சு. போன இடத்துல வேலை எல்லாம் நல்லாத் தான் நடக்குது. பொழுது ஜாலியாத் தான் போகுது. நட்புகள் நல்லாவே ஆதரிக்கறாங்க. அதுக்காக நம்ம சொந்த ஆபீஸ அப்படியே விட்டுட முடியாதே.அப்போ அப்போ தலையக் காட்டணுமே.அதுக்குத்தான் வந்தேன். எல்லாரும் நல்லா இருக்கீங்களா.. சரி..பத்திரமா இருந்துக்கோங்க.

அங்க நான் என்ன பண்ணிட்டு இருக்கேன்னு தெரிஞ்சிக்கனும்ன்னா இங்கே வாங்க.( பெரிசா வேலை செய்யவா போறேன். வழக்கம் போல் மொக்கைதான்)

முதல் நாள்
இரண்டாம் நாள்
மூன்றாம் நாள்
நான்காம் நாள்

.
நான் அங்க போன நேரத்தில இங்க‌ ஒரு சந்தோஷமான விஷயம் நடந்திருக்கு. அது என்னன்னா...


எனக்கும் 100 followers வந்திட்டாங்கோ......

ஸ்வீட் எடு.. கொண்டாடேய்ய்ய்ய்ய்ய்ய்


.

இட மாற்றம்..

Monday, October 19, 2009
இன்னும் ஒரு வாரத்துக்கு வலைச்சரம்ல எழுதப்போறேன் மக்களே.. அப்படியே அங்கனயும் வந்து கொஞ்சம் கண்டுக்கோங்க‌

.

பள்ளிக்கால‌ நினைவுகள்-I

Saturday, October 10, 2009
சில நாட்களுக்கு முன் அபியும் நானும் திரைப்படத்தில் பிரகாஷ்ராஜ் தன் பொண்ணை பள்ளியில் சேர்க்க படும்பாடுகளை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன். அப்போ எங்க அப்பா சொன்னாங்க.. நல்லவேளை.. என் புள்ளயெல்லாம் என்னை இப்பிடி அலைய விடல. அதுக்கு அதுவே அட்மிஷன் வாங்கிச்சு அப்படின்னு.. ம்ம்..எனக்கு அதெல்லாம் கொஞ்சம் நியாபகம் இருந்தாலும்.. நல்லா தெளிவா இல்ல.. அதனால அப்பாகிட்ட டீடெயிலா கேட்டேன்..அவர் சொன்ன உடனே என் பிளாகர் புத்தி வேலை செய்ய ஆரம்பிச்சுது.. ஆமா.. நாம அட்மிஷன் வாங்கின கதைய பிளாக்ல போடலாமேன்னு.. இதோ ஆரம்பிச்சுட்டேன்..

நான் பேச ஆரம்பிச்ச காலத்திலயே என் தமிழ் இலக்கியப் பயணம் ஆரம்பமாயிடுச்சு..எங்க அம்மா வீட்டு வேலைகள்னால என்னைப் பார்த்துக்கும் வேலைய எங்க அப்பாகிட்டயும் சித்திகிட்டயும் கொடுத்திருக்காங்க..எங்க அப்பா நிறைய இலக்கியக் கூட்டங்கள்ல பேசுவார். தமிழைப் பற்றி நிறையவே படிப்பார். அந்த நேரத்தில எங்க சித்தி தமிழ் இலக்கியம் முதுகலைப் படிச்சிட்டு இருந்திருக்காங்க.. வீட்ல இலக்கிய ஆறு கரைபுரண்டு ஓடிட்டு இருந்திருக்கு..அதனால "அம்மா சொல்லு", "அப்பா சொல்லு" சொல்லிக்குடுக்க வேண்டிய வயசில எனக்கு "அகர முதல சொல்லு" ன்னு சொல்லிக்குடுக்க ஆரம்பிச்சிட்டாங்க எங்க அப்பாவும் சித்தியும் . இப்பிடியே போக மூணு வயசிலயே.. பெரும்பாலான திருக்குறள், சில சிலப்பதிகார, கம்பராமாயணச் செய்யுள்கள்,பாரதி, பாரதிதாசன் கவிதைகள்ன்னு சகலமும் சொல்ல ஆரம்பிச்சுட்டேன்..
அப்போ எங்க வீட்ல பெருசா வாசல் இருக்கும்.. நாலுபக்கமும் ரூம் இருக்கும். எங்க அண்ணாக்கு அந்த வாசல்தான் சிலேட். காலைல எழுந்து.. அ,ஆ,...A,B,C,D...1,2,3,4.. எல்லாம் எழுதி அம்மாகிட்ட காட்டிட்டு தான் ஸ்கூல் போவான். நாம தான் அண்ணாவைக் அட்டக்காப்பி அடிக்கறாவங்களாச்சே..அதனால அண்ணா ஸ்கூல் போனதும் ..அந்த எழுத்துக்கள் மேலயே நானும் எழுதிப்பழக ஆரம்பிச்சுட்டேன்..
அப்போ..அண்ணா..சித்தி எல்லாரும் ஸ்கூல் போக நானும் ஸ்கூல் போகணும்ன்னு ஆசை வந்திருக்கு.. நானும் ஸ்கூல் போறேன்னு அடம் பிடிக்க ஆரம்பிச்சாச்சி.. அப்போவெல்லாம் ஹெட்மாஸ்டர் அடிப்பார்ன்னு என்னை அடக்கிட்டாங்க.அந்த வருஷம் எதோ ஒரு உதவிக்கு எங்க ஊர் பள்ளியோடத் தலைமை ஆசிரியர் அடிக்கடி எங்க வீட்டுக்கு வந்திட்டு இருந்திருக்கார். ஒரு நாள் அவர் அப்படி வந்தப்போ அவர் கிட்ட போயி..சார்.. நான் "தேராமன்னா.". சொல்வேன்.. "பொதியமலை விட்டெழுந்து" சொல்வேன்.. "துப்பார்க்க்குத் துப்பாய" சொல்வேன்.
( இதெல்லாம் திருக்குறள்..சிலப்பதிகாரம்ன்னு கூட அந்த வயசில தெரில):‍( என்னை உங்க பள்ளிகூடத்துல அடிக்காம‌ சேர்த்திகிறீங்களா? எங்க அண்ணா கூட நானும் வரேன்னு சொல்லி இருக்கேன்..அவர் அசந்துபோயி.. எங்க அப்பாகிட்ட பாப்பாவ ஸ்கூல்க்கு அனுப்புங்கன்னு கம்பெல் பண்ணியிருக்கார்.எங்க அப்பா அடுத்த வருஷம் தான் அனுப்பனும்ன்னு சொல்ல..அதுக்கு H.M..பால்வாடிக்காவது அனுப்புங்கன்னு கூட்டிட்டு போய்டார்..என் பள்ளி செல்லும் படலம் ஆரம்பிச்சுது..

ஸ்கூல்ல போயி நான் இந்த சிலப்பதிகாரத்தையும், திருக்குறளையும் வச்சிகிட்டு போட்ட சீன்ல பால்வாடில இருக்கற ஆயம்மா எல்லாம் பயந்து போக‌ அதே வருஷம் ஒன்றாம் வகுப்புல தூக்கிப் போட்டிட்டாங்க .
அந்த கிளாஸ்ல என் கஸின் ஒரு அக்கா படிச்சாங்க.. என்னை விட 2 வருசம் பெரியவங்க..ஆனா பாவம்..என்னோட கிளாஸ்.. ஸ்கூல் முடிக்கறவரைக்கும் அந்த அக்காவும் நானும் ஒண்ணாபோனா ..இந்த விவரமெல்லாம் தெரியாத சொந்தக்காரங்க‌ "எந்த கிளாஸ் படிக்கறீங்க ரெண்டு பேரும்"ன்னு கேட்டுட்டு.. " ஏன் தமிழு? நீ பெயிலாயிட்டியா? தங்கச்சிகோட ஒரே கிளாஸ்ல படிக்கற"அப்படின்னு அந்த அக்காவக் கேப்பாங்க..அப்போ தமிழக்கா ஆகற டென்சன் இருக்கே... அப்பப்பா..அக்னி பகவேனே நேர்ல வந்து நிக்கற மாதிரி தான் இருக்கும்..:‍)

ஆனா அந்த அக்காவும் நானும் சேர்ந்துட்டு ஸ்கூல பண்ணின சேட்டைகள் ரொம்ப அதிகம்.. ஆனா எதிலயாவது மாட்டினாலும் பாவம் பெரிய புள்ளன்னு அவங்கதான் திட்டு வாங்குவாங்க..அதெல்லாம் இன்னொரு நாள் சொல்றேன் ..

இந்த நிகழ்வெல்லாம் கூட எழுதி உங்களயெல்லாம் கொடுமை பண்ணலன்னா பிளாக் வச்சிருந்து என்ன பயன்..அதான் எழுதிட்டேன்
(அப்போ இருந்த அறிவை இப்போ காக்கா தூக்கிட்டு போயிடுச்சா என்பது போன்ற கேள்விகள் தடை செய்யப்படுகின்றன‌)

.

பிறந்த நாள் வாழ்த்துக்கள் அன்பு

Wednesday, October 7, 2009
அன்புவுக்கு இன்று பிறந்தநாள். அவர் எல்லா வளமும் பெற்று வாழ வாழ்த்துவோம்




பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்பு