கடவுளும் நானும்..தொடர் பதிவு

Tuesday, June 1, 2010
கடவுள் என்பவர் எனக்கு ஒரு சுவாரஸ்யமான தோழமையாகவே இன்றுவரை இருக்கிறார்.அதில் கெஞ்சல்,சமாதானம்,அன்பு,பாசம்,கோபம்,விளையாட்டு,சண்டை எல்லாமே உண்டு.

ரொம்ப சின்ன வயசுல அண்ணா கூட கோயிலுக்குப் போனப்போ, தீபத்தை தொட்டுக் கும்பிட்டுக்கோ என அண்ணன் சொல்லப் போக, தமையன் பேச்சைத் தட்டாத தங்கையாக தீபத்தின் மேலேயே கை வைத்துத் தொட்டுக் கும்பிட, அப்புறம் என்ன ஒரே கத்தல்தான், அழுகைதான்.இப்பிடியாக சாமிக்கும் எனக்குமான ரிலேஷன் கொலைவெறிலதான் ஆரம்பிச்சிது

அதுக்கு அப்புறம் சுவாரஸ்யமான காலம் ஆரம்பிச்சது ஒரு மார்கழி மாதத்தில்..
வீட்டுக்கு விருந்தாளியா வந்த ஏதோ ஒரு அத்தை, மார்கழி மாசம் அதிகாலை கோயிலுக்குப் போனா ரொம்ப நல்லது என கொழுத்திவிட்டுப் போக,அதைக் கேட்ட நானும் என் பிரண்டும் நாம் ரெண்டு பேரும் போகலாம்ன்னு முடிவு பண்ணி பிளான் எல்லாம் போட்டோம்.என்ன பிளான் தெரியுங்களா..ரெண்டு பேர்ல யார் அதிகமா போறாங்களோ அவங்களுக்கு அதிக நல்லது நட‌க்கும்.. அதனால கோயில்லுக்கு போகும்போது எல்லாம் சாமிக்கு முன்னாடி ஒரு பூவை வச்சிட்ட்டு வரணும்ன்னு பிளான். யார் முன்ன போரதுன்னு போட்டில நைட் 2 மணி 3 மனிக்கு எல்லாம் கோயில்ல போய் பூட்டி இருக்க கிரில் கேட்க்குல்ல பூவை வச்சிட்டு வருவோம்


இது வீட்ல யாருக்கும் தெரியாது.இப்பிடியே சில வருஷங்கள் மார்கழி மாசம் தொடர்ந்தது.ஒரு நாள் எங்கள் எதிர் வீட்டுப் பெரியம்மா எங்கியோ வெளியூர் போயிட்டு ஒரு மணிக்கோ 2 மணிக்கு நைட் ரிடர்ன் ஆக, அந்த நேரம் பார்த்து நான் கோயிலுக்குப் போக... அவ்ளோதான் அந்த சகாப்தம் அன்றோடு முடிந்த்து

கடவுள் என்பவர் தெருக்கோடி கடைக்காரர் போல நம் ஆசைகள் எல்லாத்தையும் பையில் போட்டு வைத்திருப்ப்பார் .. நம் செய்கைகள் பிடித்தால் அந்தப் பைகளை நமக்கு குடுப்பார்ன்னு நென‌ச்சிட்டு இருந்த காலம் அது.பின் +2 வரை கடவுள் என்னுடன் குறிப்பிடத்தகுந்த பிரச்சினை எதையும் செய்து கொள்ளவில்லை.அதனால் இன்ட்ரஸ்டிங்கா ஏதும் இல்ல‌

+2 வில் ஆசைப்பட்ட படிப்பு சேர மார்க் இருந்தும் குடும்ப சூழ்னிலையால் சேர முடியாமல் போன போது ஆரம்பிச்சது கடவுள் கூட சண்டை..உனக்கு எனக்கும் சரிவராது.. நீ எனக்கு ஏதும் செய்ய மாட்டே.. நீ உன் வழியில் போ.. நான் என் வழியில் போறேன். என சாமி கூட டூ விட்டு இருந்த காலம் கல்லூரிக் காலம்.கடவுள் கூட மனதளவில் டூ விட்டு இருந்தாலும்,கோயிலுக்கு யார் கூப்டாலும் போயிடுவேன்.கோயில போய் சாமி முன்னாடி நின்னுகிட்டு "ம்ம்.. நல்லாருக்கியா.. நான் உன்னைக் கும்பிட வரல.உன்னோட பக்தைக்கு கம்பெனிகுடுக்க வந்தேன். அப்படின்னு மனசுக்குள்ள சொல்லிட்டு நின்னுட்டு இருப்பேன்

பின்னர் முதுகலையில் பக்திமயமான தோழிக்கு கம்பெனி குடுக்க அடிக்கடி ஒரு புது கோயிலுக்குப் போக ஆரம்பித்து அக்கோயிலின் அமைதியான அழகான சூழ்நிலையால் கவரப் பட்டு சாமிகூட பழம் விட்டு உறவு புதுப்பிக்கப்பட்டது.புதுப்பிக்கப்பட்ட தோழமையாகவே ஓடிக் கொண்டிருக்கிறது.

எங்களுக்குள் கொடுக்கல் வாங்கல்கள் ஆரம்பித்திருக்கின்றன..பள்ளி நாட்களைப் போல ப்ளீஸ் எனக்கு இது மட்டும் செய்யேன். நான் உனக்கு பூஜையெல்லாம் பண்றேன் என வேண்டுதல்களை முன் வைக்க ஆரம்பித்திருக்கிறேன்.

ம்ம்..இதோ வானிலை தொடருமா மீண்டும் இடி,மழை,தென்றல் எல்லாம் வீசுமா எனப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

என் வீட்டில் அம்மா பக்திப் பழமாக இருந்தாலும், நான் சொல்றத சொல்லிட்டேன்.அதுக்கப்புறம் உனக்கு சாமி விஷயத்துல எப்படி தோணுதோ அப்படி இரு என சுதந்திரம் கொடுப்பதுதான் கடவுள் என் தோழனாகவே நிலைக்க காரணம்.இல்லன்னா. அவர் கடவுளாகவே இருந்திருப்பார் நான் அவரது பக்தையாகவோ பக்தியை மறுப்பவளாகவோ இருந்திருப்பேன்.

இந்தத் தொடர்பதிவுக்கு அழைத்த சுசி அவர்களுக்கு நன்றி.

நான் வேண்டி விரும்பி அழைப்பவர்கள்

மகா
ராஜலஷ்மி
சுபிவண்யா.


.

7 comments:

Anonymous said...

ராஜியாத்தா........... எனக்கு எப்ப சர்க்கரை பொங்கல் தரப்போறே? ஹிஹி ராஜி நான் உன் குரு, அதனால் தான் குருக்கு படையல் ...

dheva said...

பரவாயில்லை... நீங்களும் கடவுளும் பயங்கர தோஸ்த் தான்! வாழ்த்துக்கள்!

Anonymous said...

தீபத்தை தொட்டுக் கும்பிட்டுக்கோ//

நல்ல வேலை சூலத்தை காட்டலை :)

Anonymous said...

2 மணிக்கு நைட் ரிடர்ன்//

இதுக்கு பேருதான் தூக்கத்தில் நடக்கரது.

தாரணி பிரியா said...

:)

பிரேமா மகள் said...

எழுதிட்டாப் போச்சு.... டீச்சர் சொல்லி கேக்காம இருப்பமா..

சுசி said...

குரு மயிலுக்கு கொடுக்கிற சர்க்கரைப் பொங்கல்ல கொஞ்சூண்டு எனக்கும்.. தொடர கூப்டத்துக்காக.. (திட்டாம எழுதினிங்க இல்லை??)

நல்லாருக்கு கடவுளும் நீங்களும்.