க‌விதை மாதிரி..

Monday, May 9, 2011
அதிகாலைச் சூரியனே
நட்சத்திரப் போர்வையை பத்திரமாய் மடித்துவை
எங்கள் ஓட்டைக் குடிசை குழந்தைகளுக்கு
வாய்த்த அழகிய கிலுகிலுப்பை அது

********************************************************************

மனமெனும் கடலில்
உன் நினைவெனும்
ஆயிரம் நட்சத்திரங்கள்..
கரையோரத்தில் நான்
அவை வானின் பிரதிபலிப்புகள்
எனும் உண்மை அறியாமல்


.

7 comments:

ஈரோடு கதிர் said...

இன்னும் கொஞ்சம் செதுக்கியிருக்கலாம்!

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

உங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்...
நேரம் இருந்தால் பார்க்கவும் ...
http://blogintamil.blogspot.com/2011/05/blog-post_10.html

"நந்தலாலா இணைய இதழ்" said...

கவிதை அருமை!!

நந்தலாலாவுக்கு வருகை தாருங்கள்!

அம்பாளடியாள் said...

அதிகாலைச் சூரியனே
நட்சத்திரப் போர்வையை பத்திரமாய் மடித்துவை
எங்கள் ஓட்டைக் குடிசை குழந்தைகளுக்கு
வாய்த்த அழகிய கிலுகிலுப்பை அது

சொல்லாமல் சொல்லும் வறுமையின் கொடுமை அதன் வலிகள் இங்கே அழகிய கவிதை வரிகளாய் .
அருமை...அருமை...அருமை....வாழ்த்துக்கள் உங்கள் கவிதை வளம் மென்மேலும் சிறப்புற...

Agape Tamil Writer said...

அன்பு சகோதரா, இந்த வலைபதிவு முயற்சி மிகவும் அருமை, தமிழர்கள் தமிழில் பிண்ணூட்டமிட, தமிழ் எழுதியை நிறுவி வாசகர்களுக்கு உதவலாமே, அதிக விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும் நன்றி

Miracle balloon decoration said...

உங்கள் தளத்தை இன்று தான் (சு)வாசித்தேன்.. அருமை..

..சபரி.. said...

உங்கள் தளத்தை இன்று தான் (சு)வாசித்தேன்.. அருமை..